Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேட்டையில் இறங்கிய பாதுகாப்புப் படை.. காஷ்மீரில் ஒரே ஆண்டில்.. 172 தீவிரவாதிகள் துப்பாக்கிக்கு இரை!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜம்மு காஷ்மீரில் கடந்த 2022-ம் ஆண்டு மட்டும் 172 தீவிரவாதிகள் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

காஷ்மீரில் தீவிரவாதத்துக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் முழுவீச்சில் களம் இறங்கியதன் காரணமாக, ஒரே ஆண்டில் நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் வேட்டையாடப்பட்டுள்ளனர்.

முக்கியமாக, தீவிரவாத இயக்கங்களில் புதிதாக சேரும் இளைஞர்களை குறிவைத்து கடந்த ஆண்டு பாதுகாப்புப் படையினர் என்கவுன்ட்டரில் ஈடுபட்டுள்ளனர்.

தலைதூக்கிய தீவிரவாதம்

தலைதூக்கிய தீவிரவாதம்

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனப் பிரிவு 370, கடந்த 2019-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்தது. அதன் பின்னர், ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளால் அங்கு தீவிரவாதிகளின் கொட்டம் அடக்கப்பட்டது. இந்த சூழலில், ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைந்தது காஷ்மீரில் உள்ள தீவிரவாத அமைப்புகளுக்கு உத்வேகம் அளித்ததால் அங்கு மீண்டும் தீவிரவாதிகளின் அராஜகம் தலைதூக்கியது.

 வேட்டையில் இறங்கிய பாதுகாப்புப் படை

வேட்டையில் இறங்கிய பாதுகாப்புப் படை

காஷ்மீருக்கு திரும்ப மாநில அந்தஸ்து வழங்க, மத்திய அரசை பணிய வைக்கும் விதமாக அங்கு தீவிரவாதிகள் அராஜகத்தில் ஈடுபட்டு வந்தனர். குறிப்பாக, வெளிமாநிலத்தவர்கள், காஷ்மீர் பண்டிட்டுகள், காவல்துறையில் பணிபுரியும் இஸ்லாமியர்கள் ஆகியோரை குறிவைத்து தீவிரவாதிகள் கொலைவெறி தாக்குலில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து, தீவிரவாதிகளுக்கு எதிரான வேட்டையில் காவல்துறை, சிஆர்பிஎப், ராணுவத்தைச் சேர்ந்த வீரர்கள் களமிறக்கப்பட்டனர்.

ஒரே ஆண்டில் 172 தீவிரவாதிகள்

ஒரே ஆண்டில் 172 தீவிரவாதிகள்

அந்த வகையில், கடந்த ஆண்டு பாதுகாப்புப் படையினரின் என்கவுன்ட்டர்கள் அடிக்கடி நடைபெற்று வந்தன. இந்நிலையில், கடந்த ஒரே ஆண்டில் காஷ்மீரில் 172 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காஷ்மீர் ஏடிஜிபி விஜய்குமார் கூறுகையில், "கடந்த ஆண்டில் காஷ்மீரை சேரந்த தீவிரவாதிகள் 130 பேர் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டிருக்கின்றனர். பாகிஸ்தானைச் சேர்ந்த 42 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

புதிய தீவிரவாதிகளே குறி

புதிய தீவிரவாதிகளே குறி

மொத்தம் 93 என்கவுன்ட்டர் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. குறிப்பாக, லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த 108 தீவிரவாதிகள் இந்த என்கவுன்ட்டர் சம்பவங்களில் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டை பொறுத்தவரை, பயங்கரவாத இயக்கங்களில் சேரும் புதிய தீவிரவாதிகளே எங்களின் குறியாக இருந்தார்கள். கடந்த ஆண்டு பயங்கரவாத இயக்கங்களில் 100 பேர் சேர்ந்தனர். அவர்களில் 65 பேர் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்த அடுத்த மாதமே கொல்லப்பட்டனர். 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 18 பேர் மட்டுமே உயிருடன் இருக்கிறார்கள்" என விஜய்குமார் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+