டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஸ்பீடு எடுக்கும் அரசு.. 2 "டோஸ்" தடுப்பூசி செலுத்தி கொண்டோர் எண்ணிக்கை.. 22 கோடியை எட்டுகிறது

2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டோர் எண்ணிக்கை 22 கோடியை எட்டுகிறது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகமாகி கொண்டுதானிருக்கிறது.. முழுமையான கட்டுப்பாட்டுக்குள் உலக நாடுகளில் வரவில்லை.. இந்தியாவிலும் இதே நிலைமைதான்.

இப்போதைய சூழலில் தடுப்பூசிகள் மட்டுமே மக்களுக்கு கை கொடுத்து வருகின்றன.. அந்த வகையில், இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட வேக்சின் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது..

தேவக்கோட்டையில் கார்த்தி சிதம்பரம்- கே ஆர் ராமசாமி கோஷ்டியிடையே மோதல்.. நாற்காலிகளை வீசி தாக்குதல்! தேவக்கோட்டையில் கார்த்தி சிதம்பரம்- கே ஆர் ராமசாமி கோஷ்டியிடையே மோதல்.. நாற்காலிகளை வீசி தாக்குதல்!

 3வது அலை பரவல்

3வது அலை பரவல்

2-ம்அலை பரவலில் நிறைய உயிரிழப்புகளை சந்தித்ததையடுத்து, மக்களிடம் ஒருவித பீதி ஏற்பட்டு வருகிறது. 3வது அலைபரவலும் வர போகிறது என்பதால், இந்த கலக்கம் அதிகரித்து வருகிறது.. அதற்கேற்றபடி, தடுப்பூசி போடும் பணிகள் மெல்ல வேகமெடுத்துள்ளது... எப்படியும் இந்த வருட இறுதிக்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதை இலக்காக கொண்டு மத்திய அரசும் முனைப்பாக செயல்பட்டு வருகிறது.

தடுப்பூசி

தடுப்பூசி

சில தினங்களுக்கு முன்பு, இந்தியாவில் தடுப்பூசி பணிகள் குறித்து நிதி ஆயோக் உறுப்பினர் வி கே பால் செய்தியாளர்களிடம் பேசும்போது, "இந்தியா மக்கள்தொகையில் குறைந்தது மூன்றில் இரண்டு பங்கு பேருக்குக் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது... அதாவது 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 66% பேர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் போடப்பட்டுள்ளது... அதேபோல 18+ நபர்களில் கிட்டதட்ட 25% பேருக்கு 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது" என்றார்.

 முதல் டோஸ்

முதல் டோஸ்

ஆனால், இப்போது இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டதன் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாம்.. நேற்று காலை 7 மணி நிலவரப்படி நாட்டில் இதுவரை 84 கோடியே 15 லட்சத்து 18 ஆயிரத்து 26 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. இதில், முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டோர் எண்ணிக்கை 62 கோடியே 29 லட்சத்து 2 ஆயிரத்து 393 ஆகும்...

 2வது டோஸ்

2வது டோஸ்

2 தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை 22 கோடியை நெருங்குகிறது. 21 கோடியே 86 லட்சத்து 15 ஆயிரத்து 633 பேர் 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்டுள்ளனர்.. கடந்த 24 மணி நேரத்தில் 72 லட்சத்து 20 ஆயிரத்து 642 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டிருக்கிறார்கள்... இவர்களில் 41 லட்சத்து 99 ஆயிரத்து 612 பேர் முதல் டோஸும், 30 லட்சத்து 21 ஆயிரத்து 30 பேர் 2வது டோஸும் போட்டுக்கொண்டுள்ளனர்.

English summary
2 doses Covid19 vaccine reaches 22 crore people, says Govt
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X