கங்கையை முழுவதும் சுத்தமாக்கி பேணி காப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.. ரத்தன் லால் கட்டாரியா
டெல்லி: கங்கை நதியை சுத்தமாக. தூய்மையாக, மாசின்றி பேணி காக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளதாக, மத்திய நீர்சக்தி துறை இணையமைச்சர் ரத்தன் லால் கட்டாரியா கூறியுள்ளாா்.
கழிவுநீர், குப்பை போன்றவற்றால் மாசடைந்துள்ள கங்கை நதியை சுத்தப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கங்கையை தூய்மைப்படுத்துவதற்காக மத்திய அரசு தேசிய திட்ட அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி உள்ளது.

பல்வேறு மாசுகளால் அசுத்தமடைந்துள்ள கங்கை நதியை சுத்தம் செய்வதற்காக நமாமி கங்கை என்ற திட்டத்தை, பிரதமர் மோடி தலைமையிலான அரசு 2014 ம் ஆண்டு ஜுன் மாதம் தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தின் போது சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த ரேவதி ராமன் சிங், கங்கை நதியை சுத்தப்படுத்தும் பணிகள் குறித்து கேள்வி எழுப்பினார்.
மேலும் நாட்டிலுள்ள நதிகளின் நிலை குறித்து கவலை தெரிவித்தார். பனிப்பாறைகள் விரைவாக உருகி வருவதாகவும் குறிப்பிட்டார். அதே போல கங்கையை காப்பாற்ற அணைகள் கட்டுவதை நிறுத்த வேண்டும் என்று அவர் கோரினார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் கட்டாரியா கடந்த 5 ஆண்டுகளில் கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்திற்காக, மத்திய அரசு சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
கங்கை நதியை தூய்மைப்படுத்துவதற்கும், புனரமைக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. முந்தைய திட்டங்களை மறுசீரமைப்பு செய்வது உட்பட பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரத்தன் லால் கட்டாரியா தெரிவித்தார்.
உத்தரகாண்ட், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கங்கையில் கலக்கும் கழிவு நீரை சுத்திகரிக்க சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications