''அமித்ஷாவை காணோம்.. கண்டா கையோடு கூட்டி வாருங்க''.. காவல் நிலையத்தில் புகார்.. அதிர்ந்த போலீசார்
டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை காணவில்லை என்றும் அவரை கண்டால் வரச் செல்லுமாறும் போலீசில் புகார் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்திய தேசிய மாணவர் சங்கத்தின்( என்.எஸ்.யு.ஐ) பொதுச் செயலாளராக இருப்பவர் நாகேஷ் காரியப்பா. இவர் டெல்லி பாராளுமன்ற தெரு காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்தார்

அமித்ஷாவை காணோம்
''நாடு முழுவதும் மக்கள் தொற்று நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் நாட்டின் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை காணவில்லை. அவரை கண்டுபிடித்து தர வேண்டும்'' என்று புகார் மனுவில் கூறப்பட்டு இருந்ததால் போலீசார் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். இதனை தொடர்ந்து டெல்லி போலீசார் இந்திய தேசிய மாணவர் சங்க அலுவலகத்துக்கு நேரில் வந்து புகார் கொடுத்தவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.

அரசியல்வாதிகள் கடமை
'உள்துறை அமைச்சரை காணவில்லை' என்.எஸ்.யு.ஐ உறுப்பினர்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து தெரிவித்தனர். இதனால் அவர்களிடம் விசாரிக்க வந்தோம் என்று போலீசார் தெரிவித்தனர். புகார் தெரிவித்தது குறித்து நாகேஷ் காரியப்பா கூறுகையில், ' நாடு ஒரு கொடிய தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் நெருக்கடியில் இருக்கும்போது, முழு நாட்டிற்கும் பொறுப்புக் கூற வேண்டியது அரசியல்வாதிகளின் கடமையாகும்.

அரசு பதில்கள் என்ன?
அரசியல்வாதிகள் தேசத்திற்கு சேவை செய்ய வேண்டும். நெருக்கடி சூழ்நிலையிலிருந்து ஓடக்கூடாது. தொற்றுநோய்களுக்கு மத்தியில் இரண்டாவது மிக சக்திவாய்ந்த மற்றும் பொறுப்பான நபரை (அமித்ஷா) நீண்ட நாட்களாக காணவில்லை. அமித்ஷா இப்போது நாட்டின் உள்துறை மந்திரியா? இல்லை பா.ஜ.க உறுப்பினரா? எங்களின் புகார் தொடர்பாக அரசின் பதில்களை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என்று நாகேஷ் காரியப்பா கூறினார்.

பா.ஜ.க ஆட்சியில் மோசம்
என்.எஸ்.யு.ஐ ஊடக பொறுப்பாளர் லோகேஷ் சுக் கூறுகையில், ' 2013-ம் ஆண்டு வரை அரசியல்வாதிகள் மக்கள் மது பொறுப்பாளர்களாக, அக்கறையாக இருந்தனர். ஆனால் 2014 ல் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தபின் இந்த விஷயங்கள் முற்றிலும் மாறிவிட்டன. மக்களுக்கு நெருக்கடி ஏற்படும்போதெல்லாம் பா.ஜ.க தலைவர்கள் காணாமல் போய் விடுகின்றனர்' என்று தெரிவித்தார்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications