குடியரசு தினத்திற்கு பிறகு.. ஏர் இந்தியா நிறுவனத்தை கைமாற்ற திட்டம்.. டாடா வசம் செல்கிறது!
டெல்லி: குடியரசு தினத்துக்கு பிறகு டாடா நிறுவனத்திடம் ஏர் இந்தியா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்படவிருக்கிறது.
இந்தியாவின் ஒரே பொதுத்துறை விமான சேவை நிறுவனமாக ஏர் இந்தியா' நிறுவனம் செயலபட்டு வந்தது. தனியார் விமான நிறுவனங்களின் வருகையால் ஏர் இந்தியா நிறுவனம் நஷ்டத்தை சந்திக்கத் தொடங்கியது.
சமீபகாலமாக ஏர் இந்தியாவின் நஷ்டம் ரூ.70,000 கோடியை நெருங்கியது. இதனால் ஏர் இந்தியாவை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. இதையடுத்து ஏர் இந்தியா நிறுவனம் ஏலத்துக்கு வந்தது.

ஏர் இந்தியா
ஒரு வருடமாக ஏர் இந்தியா விற்பனை சாத்தியமாகாமல் இருந்தது. இந்தநிலையில், டாடா குழுமம் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க ஆர்வம் தெரிவித்தது. மத்திய அமைச்சர்கள் குழு நடத்திய ஆலோசனை நடத்தப்பட்டது. அதையடுத்து, ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமத்திடம் விற்பதாக மத்திய அரசு அறிவித்தது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கடந்த ஆண்டு அக்டோபரில் வெளியிட்டது மத்திய அரசு.

டாடா
தொடர் நஷ்டத்தில் இயங்கிவந்த ஏர் இந்தியா நிறுவனத்தை 18 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்து கடந்த ஆண்டு டாடா குழுமம் வாங்கியது. கிட்டத்தட்ட 68 ஆண்டுகளுக்குப் பிறகு 'ஏர் இந்தியா' விமான நிறுவனம் மீண்டும் டாடா குழுமத்தின் கைகளுக்கு வந்தது. 1932-ம் ஆண்டு டாடா குழுமத்தால் தொடங்கப்பட்ட ஏர் இந்தியா', 1953-ம் ஆண்டு அரசுடமையாக்கப்பட்டது. இந்தியாவின் முதல் விமான சேவை என்ற பெருமையோடு ஏர் இந்தியா நிறுவனம் செயல்பட்டது.

விற்பனை
ஏர் இந்தியா நிறுவனம் டாடா குழுமத்திடம் விற்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், அந்த நிறுவனத்துக்கு சொந்தமான கட்டடங்கள் உள்ளிட்ட ரூ.14, 718 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்கள் அரசின் வசமே இருக்கும். மேலும் ஏர் இந்தியாவில் பணியாற்றுவோர் மற்றும் ஓய்வுபெற்றோரின் நலன்கள் காக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

ஒப்படைப்பு
குடியரசு தினத்துக்குப் பிறகு ஏர் இந்தியா நிறுவனத்தை முழுமையாக டாடா நிறுவனத்திடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நிறுவனத்தின் தற்போதைய கையிருப்பு மற்றும் நிதி அறிக்கை குறித்து டாடா நிறுவனத்திடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. இதைடாடா சன்ஸ் பரிசீலனை செய்து சொல்ல வேண்டும். அதன்பிறகு, வரும் வியாழக்கிழமைக்குள் ஏர் இந்தியா நிறுவனம் டாடாவிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications