கொரோனா.. விமான பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.. பட்டியலிட்ட மத்திய சுகாதாரத்துறை
டெல்லி: இந்தியாவில் ஓமிக்ரானின் உருமாறிய பிஎப் 7 வகை கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் விமான பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
சீனாவில் பரவி வரும் ஓமிக்ரான் உருமாறிய பிஎப் 7 கொரோனா வைரஸ் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவிலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளன.
அதன்படி விமான நிலையங்களில் ரேண்டமாக 2 சதவீத பயணிகளுக்கு கொரோனாவுக்கான ஆர்டிபிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.

வழிகாட்டு நெறிமுறை வெளியீடு
இந்நிலையில் தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் விமான பயணிகளுக்கான கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சில வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி உள்ளது. அதன்படி இந்தியா வரும் வெளிநாட்டினர் தாங்கள் வசிக்கும் நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியை முழுமையாக செலுத்தி இருக்க வேண்டும். விமான பயணத்தின்போது அறிகுறிகள் இருப்பின் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.

தனிமை சிகிச்சை
மேலும் விமான நிலையத்தில் இருந்து சென்ற பிறகு தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். மேலும் விமான நிலையத்தில் இறங்கியவுடன் காய்ச்சலுக்கான வெப்ப சோதனை செய்து கொள்ள வேண்டும். இந்த வேளையில் அறிகுறி இருப்பின் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

2 சதவீத பயணிகளுக்கு சோதனை
மேலும் விமானத்தில் உள்ள மொத்த பயணிகளில் 2 சதவீதம் பேருக்கு விமான நிலையங்களில் ரேண்டமாக பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. இதில் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இந்த சோதனைக்கு பயணிகள் தங்கள் மாதிரிகளை வழங்கிய பிறகுவிமான நிலையத்தில் இருந்து தாராளமாக வெளியேறலாம். இவ்வாறு பெறப்படும் மாதிரிகளில் கொரோனா கண்டறியப்பட்டால் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். மேலும் அவர்களின் மாதிரிகள் INSACOG ஆய்வகத்தில் வைரஸின் மரபணு சோதனைக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு விலக்கு
மேலும் அனைத்து பயணிகளும் முன்னெச்சரிக்கையாக தங்களது வருகை பற்றி அருகே உள்ள சுகாதார நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட வேண்டும். ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் தேசிய அல்லது மாநில உதவி எண்களை கட்டாயம் அழைக்க வேண்டும். விமான நிலையத்தில் ரேண்டம் பரிசோதனையின்போது 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர்களுக்கு வெப்ப சோதனை உள்ளிட்டவற்றில் அறிகுறி இருப்பினும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தப்படுவார்கள்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications