நான் கற்ற முதல் தமிழ் வார்த்தை "இதுதான்".. பொங்கல் அன்று ஆனந்த் மகிந்திரா போட்ட சூப்பர் ட்வீட்
டெல்லி: நான் தமிழகத்தில் பள்ளிக் கல்வியை முடித்தேன். அப்போது நான் கற்றுக் கொண்ட தமிழ் வார்த்தை இதுதான் என ஆனந்த் மகிந்திரா போட்ட ட்வீட் வைரலாகி வருகிறது.
Recommended Video
மகிந்திரா குடும்பத்தின் தலைவராக உள்ளவர் ஆனந்த் மகிந்திரா. இவர் இந்தியாவின் தொழிலதிபர்களில் முன்னணியில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு சுமார் ரூ 190 கோடி டாலர் என ஃபோர்ப்ஸ் பத்திரிகை கூறுகிறது.
இவர் சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பவர். எப்போதுமே சுவாரஸ்யமான விஷயங்களை தனது ட்வீட்டர் மூலம் உலகிற்கு பகிர்வார். அவரது ட்வீட்டில் தொழில் சார்ந்த விஷயங்கள், விழிப்புணர்வு, நகைச்சுவை, சுவாரஸ்யம் என அத்தனையும் இருக்கும்.

கொல்லிமலை 70 ஹேர்பின் வளைவுகள்
அண்மையில் கூட நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை உள்ள 70 ஹேர்பின் வளைவுகள் குறித்து இவர் ட்விட்டரில் பகிர்ந்தார். எரிக் சோல்ஹைம் என்ற வெளிநாட்டவர் ஒருவர் ஆச்சரியமூட்டும் இந்தியா என குறிப்பிட்டு 70 கொண்டை ஊசி வளைவுகளுடன் காணப்படும் இந்தியாவின் திரில்லான சாலைகளில் ஒன்று தமிழகத்தில் கொல்லிமலை என குறிப்பிட்டுள்ளார். அதற்கான புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

ட்வீட்
இதை ரீட்வீட் செய்த ஆனந்த் மகிந்திரா, "எரிக் என் நாடான இந்தியா குறித்து எத்தனை குறைந்த விஷயங்கள் எனக்கு தெரிந்துள்ளது என்பதை உங்கள் ட்வீட் காண்பிக்கிறது. இது தனிச்சிறப்பு. இந்த சாலையை எப்படி கட்டியிருப்பார்கள் என்பதை கண்டுபிடிக்க விரும்புகிறேன் என பகிர்ந்தார். இவரது ட்வீட் மூலம்தான் தமிழகத்தின் கொல்லிமலை உலகளவில் பிரபலமானது தெரியவந்தது.

தமிழ் மொழி
இந்த நிலையில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை அன்று ஆனந்த் மகிந்திரா ஒரு ட்வீட் போட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது. அந்த ட்வீட்டில் தமிழ் குறித்து குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் நான் பள்ளிப் படிப்பை தமிழகத்தில் முடித்தேன். அதனால் தமிழில் நான் கற்றுக் கொண்ட முதல் சொல் ஒன்று உள்ளது. அந்த சொல்லை நான் அடிக்கடி பயன்படுத்தியிருக்கிறேன். சில சமயம் உரக்கவும் சொல்லியிருக்கிறேன். சில சமயங்களில் மனதிற்குள் சொல்லியிருக்கிறேன்.

போடா டேய்
தமிழ் எப்போதுமே திறமையான மொழி. ஆங்கிலத்தில் நாம் யாரிடமாவது உங்களது பேச்சை கேட்கவோ அல்லது உங்கள் கருத்தை அறியவோ எனக்கு நேரமில்லை. அதனால் என்னை விடுங்கள் என சொல்வதற்கு தமிழில் எளிதாக போடா டேய் என சொன்னால் போதும். சென்னையில் யாராவது எனது வண்டி மீது இடித்துவிட்டால் அவர்களை திட்டுவதற்கு கைவசம் நிறைய தமிழ் வார்த்தைகளை கற்று வைத்துள்ளேன் என்றார். இவரது ட்வீட்டை பார்த்த நெட்டிசன்கள், மௌன ராகம் படத்தில் டெல்லி சிங்கிற்கு நடிகை ரேவதி 3 தமிழ் வார்த்தைகளை கற்றுக் கொடுப்பார். அதில் ஒன்று போடா டேய் ஆகும். இதுதான் நினைவிற்கு வருகிறது என ட்வீட் போட்டுள்ளார்கள்.












Click it and Unblock the Notifications