'எல்லையில் வாலாட்டினால் தக்க பதிலடி'.. ராணுவ தினத்தில் சூளுரைத்த தளபதி எம்.எம்.நரவனே!
டெல்லி: கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் கிழக்கு லடாக் எல்லை பகுதிகளில் சீன ராணுவத்தினர் பெரும் அட்டூழியத்தில் ஈடுபட்டனர் 2020-ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன ராணுவ வீரர்களிடையே கடும் மோதல் மூண்டது.
இரு நாட்டு ராணுவ வீரர்களும் கற்களால் தாக்கி கொண்டனர். இந்த பயங்கர மோதலில் நமது ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். சீன தரப்பில் 45 வீரர்களும் உயிரிழந்தனர்.

பலகட்ட பேச்சுவார்த்தை
இதனை தொடர்ந்து லடாக் எல்லையில் பெரும் பதற்றம் உண்டானது. இதன் பின்பு லடாக் எல்லையில் அமைதி திரும்ப இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் நடத்தினர். இதன் காரணமாக சில பதற்றமான பகுதிகளில் கூடுதலாக குவிக்கப்பட்டு இருந்த இரு நாடு படை வீரர்களும், அவர்களின் ராணுவ டாங்கிகளும் விலக்கிக் கொண்டன. இதுவரை 14 கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்துள்ளன.

சீனாவின் பிடிவாதம்
முதலில் நடந்த பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்த நிலையில் கடைசியாக நடந்த இரண்டு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இரு தரப்பின் நிலையை மாற்றுவதற்கான சீனாவின் ஒருதலைப்பட்ச முயற்சிகளை இந்தியா சுட்டிக்காட்டியது. ஆனால் இந்திய தரப்பின் கோரிக்கையை சீனத் தரப்பு ஏற்கவில்லை. எல்லையில் இருந்து முழுமையாக விலக சீனா தொடர்ந்து பிடிவாதம் சாதித்து வருகிறது. மேலும், இந்திய எல்லை பகுதிகளில் கட்டுமானத்தை மேற்கொண்டு இந்தியாவை அச்சுறுத்தி வருகிறது சீனா.

இந்திய ராணுவம் உறுதி
இந்த நிலையில் இந்திய ராணுவ தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி தலைநகர் டெல்லியில் முப்படை தளபதிகளும் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்கள். ராணுவ தினத்தில் உரையாற்றிய ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவனே எல்லையில் குடைச்சல் தரும் சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்தார். நாட்டின் எல்லையில் உள்ள நிலையை ஒருதலைப்பட்சமாக மாற்றும் எந்தவொரு முயற்சியையும் முறியடிப்பதில் இந்திய ராணுவம் உறுதியாக உள்ளது என்று அவர் கூறினார்.

அமைதியை தவறாக நினைத்தால்..
சமமான, பரஸ்பர பாதுகாப்பு கொள்கையின் அடிப்படையில் ஏற்கனவே உள்ள விதிமுறைகள் மூலம் கருத்து வேறுபாடுகள் மற்றும் சர்ச்சைகளில் உள்ள வேறுபாடுகள் சிறந்த முறையில் தீர்க்கப்படுகின்றன நம்புவதாக கூறிய அவர் அமைதியே நமது விருப்பம். நமது உள்ளார்ந்த வலிமையிலிருந்து பிறந்த அமைதியை யாரும் ஒருபோதும் தவறாக நினைக்க கூடாது' என்று கூறினார். பயங்கரவாதத்தின் மூலத்தைத் தாக்கும் நமது திறனையும் விருப்பத்தையும் ராணுவ நடவடிக்கைகள் ஏற்கனவே நிரூபித்துள்ளன என்றும் ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவனே கூறினார்.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications