உலக தடுப்பூசி சந்தையை பிடிக்க.. சண்டையிடும் மாநிலங்கள்.. இந்தியா எங்கே ?.. கெஜ்ரிவால் வருத்தம்!
டெல்லி: இந்திய மாநிலங்கள் சர்வதேச சந்தையில் கொரோனா தடுப்பூசி மார்கெட்டுகளை பிடிக்க ஒன்றுக்கொன்று சண்டையிடுகின்றன என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
Recommended Video
இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காமல் நோயாளிகள் அல்லாடி வருகிறன்றனர்.

தொடங்காத திட்டம்
இது தவிர ஆக்சிஜன் கிடைக்காமல் மாநிலங்கள் தவித்து வருகின்றன. கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியாவில் கோவோக்சின், கோவிஷில்டு ஆகிய தடுப்பூசிகள் போடப்படுகின்றன. நாடு முழுவதும் கடந்த 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

தடுப்பூசி தட்டுப்பாடு
ஏறக்குறைய அனைதது மாநிலங்களிலும் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதே இதற்கு கரணம். இந்தியாவில் இரண்டு நிறுவனங்களே தடுப்பூசி தயாரிப்பதில் செயல்பட்டு வருவதால் நாட்டின் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. இதனால் பல்வேறு மாநிலங்கள் தடுப்பூசிகளை நேரடியாக வெளிநாடுகளில் இருந்து முடிவு செய்துள்ளன.

சண்டையிடும் மாநிலங்கள்
தமிழகம் வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசிகளை பெறுவதற்கு உலகலாவிய டெண்டர் கோரியுள்ளது. பல்வேறு மாநிலமும் இந்த முயற்சியை கையிலெடுத்தது. இந்த நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இது தொடர்பாக டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:- இந்திய மாநிலங்கள் சர்வதேச சந்தையில் கொரோனா தடுப்பூசி மார்கெட்டுகளை பிடிக்க ஒன்றுக்கொன்று சண்டையிடுகின்றன.

கெஜ்ரிவால் வருத்தம்
இதற்காக உத்தர பிரதேசம் மகாராஷ்டிராவுடன் சண்டையிடுகிறது. மகாராஷ்டிரா ஒடிசாவுடன், ஒடிசா டெல்லியிடனும் சண்டையிடுகின்றன. இந்தியா எங்கே? இந்த நிலை உலகில் இந்தியாவின் மதிப்புக்கு தீங்கு விளைவிக்கும். தடுப்பூசி உற்பத்தியாளர்களையும், தடுப்பூசி உற்பத்தி நாடுகளையும் தனிப்பட்ட மாநிலங்களை விட இந்தியா என்று அணுகும்போது நமது பேரம் பேசும் சக்தி மிக அதிகம். இந்திய அரசுக்கு அந்த நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அதிக இராஜதந்திரம் உள்ளது "என்று கெஜ்ரிவால் ட்வீட் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications