டெல்லியில் ரூ.30 லட்சத்துடன் ஏ.டி.எம் இயந்திரம் கொள்ளை… கைவரிசை காட்டிய கொள்ளையர்களுக்கு வலைவீச்சு
டெல்லி: 30 லட்சம் ரூபாயுடன் ஏ.டி.எம். இயந்திரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நவாடா மெட்ரோ ரயில் நிலையம் அருகே இந்த கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது. டெல்லியின் துவாரகா பகுதியில் உள்ள கார்ப்பரேட் வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் இயந்திரத்தில் 30 லட்சம் ரூபாய் வைக்கப்பட்டிருந்தது.

காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே செயல்படும் இந்த ஏ.டி.எம் மையத்தின் ஷட்டரை மூடாமல், காவலாளி இரவு வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், 2 மர்ம நபர்கள் ஏ.டி.எம் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராவுக்கு செல்லும் வயர்களை அறுத்து எறிந்துவிட்டு சிசிடிவி கேமராவில் கிரீசை தடவி உள்ளனர். இதையடுத்து, ஏடிஎம் இயந்திரத்தை கடப்பாரையால் பெயர்த்து எடுத்து தூக்கிச் சென்றுள்ளனர். வழக்கம் போல் அடுத்த நாள் காலையில் வந்த காவலாளி ஏடிஎம் இயந்திரம் மாயமானதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார் .
இதுகுறித்து தகவலறிந்த வங்கி மேலாளர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் 2 மர்ம நபர்கள் ஏடிஎம் இயந்திரத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக கூறினர். ஏடிஎம் இயந்திரத்திற்கு அருகே இருந்த சிசிடிவி கேமிராகளை கைப்பற்றி, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கொள்ளைச் சம்பவம் நடப்பதற்கு சிறிது மணி நேரங்களுக்கு முன்பாக ஏடிஎம் இயந்திரத்தில் 16 லட்சம் ரூபாய் நிரப்பப்பட்டதாக வங்கி மேலாளர் தெரிவித்துள்ளார். இந்தியக் குற்றவியல் சட்ட பிரிவு 380 (திருட்டு) மற்றும் 457 (குற்றச்சாட்டு) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். மேலும் தப்பி ஓடிய குற்றவாளிகளைப் பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications