உச்சநீதிமன்றம் மீதான விமர்சனம்: ஸ்டாலினுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி மறுத்த அட்டர்னி ஜெனரல்
டெல்லி: உச்சநீதிமன்றத்தை விமர்சித்ததாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவதற்கு அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, உச்சநீதிமன்றத்தையும் கூட பயன்படுத்தி மக்களை மத்திய பாஜக அரசு அச்சுறுத்தி வருகிறது என ஆங்கில டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில் ஸ்டாலின் கூறியிருந்தாராம். இது உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என மாதவி என்ற வழக்கறிஞர் அட்டர்னி ஜெனரலுக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.

மேலும் இத்தகைய விமர்சனத்துக்காக மு.க.ஸ்டாலின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும் என்றும் அட்டர்னி ஜெனரல் வேணுகோபாலிடம் மாதவி அனுமதி கோரியிருந்தார். ஆனால் இதற்கு அட்டர்னி ஜெனரல் அனுமதி அளிக்கவில்லை.
அத்துடன், தேர்தல் காலங்களில் வாக்குகளைப் பெறுவதற்காக இத்தகைய விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதுதான்.. இதை பொருட்படுத்த தேவையும் இல்லை. இதற்கு எல்லாம் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தால் நிறைய கருத்துகளுக்கு வழக்கு போட வேண்டிய நிலை வரும்.
உச்சநீதிமன்றத்தின் மீதான மக்கள் நம்பிக்கையை சீர்குலைக்கும் கருத்துகள் கூறப்பட்டால் அப்போது அவமதிப்பு வழக்கு தொடரலாம். அதற்கும் ஒப்புதல் வழங்க முடியும். தற்போதைய நிலையில் மு.க.ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு தொடர வேண்டிய அவசியம் எதுவும் இல்லை என பதில் அனுப்பி இருக்கிறார் அட்டர்னி ஜெனரல் வேணுகோபால்.
-
"டெல்லி என்ன.. அமெரிக்காவே மிரட்டினாலும்..” டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் கொடுத்த பதில்! -
சிபிஎம் கட்சிக்கு 5 தொகுதிகள்தான்! கட் அன்ட் ரைட்டாக சொன்ன ஸ்டாலின்! பெ.சண்முகம் வைத்த டிமாண்ட் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2!












Click it and Unblock the Notifications