Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சும்மா சும்மா ஆன்டிபயாடிக் உட்கொண்டால் ஆபத்து!லேசான காய்ச்சல், சளிக்கு வேண்டாம் -ஐசிஎம்ஆர் வார்னிங்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மக்களுக்கு லேசான காய்ச்சல், சளி ஏற்படும்போதே ஆன்டிபயாடிக் மருந்துகளை வழங்குவதை மருத்துவர்கள் தவிர்க்க வேண்டும் எனவும், அதேபோல் தேவைக்கு அதிகமாகவும் ஆன்டிபயாடிக் மருந்துகளை வழங்கக் கூடாது எனவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலான (ஐசிஎம்ஆர் அறிவுறுத்தி உள்ளது.

ஆன்டிபயாடிக் எனப்படும் நோய் எதிர்ப்பு மருந்துகள் உடலில் ஏற்படும் நோய் தொற்றுகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி அவற்றை அழித்து குணப்படுத்தி வருகின்றன.

உலகம் முழுவதும் மருத்துவர்களால் நோயாளிகளுக்கு ஆன்டிபயாடிக் எனப்படும் இந்த நோய் எதிர்ப்பு மருந்துகள் அதிகளவில் பரிந்துரை செய்யப்பட்டு வருகின்றன.

 இந்தியா முதலிடம்

இந்தியா முதலிடம்

அதிலும் குறிப்பாக உலக அளவில் ஆன்டிபயாடிக் மருந்துகளை அதிகம் உட்கொள்ளும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவே முதலிடத்தில் இருந்து வருகிறது. இந்த நிலையில் ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக்கொள்ளும் இந்தியர்களுக்கு அது பயனளிக்காமல் போவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்து இருக்கிறது.

 ஐசிஎம்ஆர் ஆய்வு

ஐசிஎம்ஆர் ஆய்வு

இது தொடர்பாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் வரை ஏராளமான நோயாளிகளை ஐசிஎம்ஆர் பரிசோதனை செய்து பார்த்தபோது, கார்பெனம் என்ற ஆன்டிபயாடிக் மருந்து மக்கள் பலருக்கு பயனளிக்கவில்லை என்பது தெரியவந்தது. இந்த நோய் எதிர்ப்பு மருந்தை பயன்படுத்தும்போதெல்லாம், நோய் கிருமி வேகம் பெறுவதாக கூறப்படுகிறது.

வீரியம் இழந்த ஆன்டிபயாடிக்

வீரியம் இழந்த ஆன்டிபயாடிக்

அதே சமயம் நோய் கிருமியை அந்த ஆன்டிபயாடிக் மருந்தால் அழிக்க முடியவில்லை எனவும், பாக்டீரியம் கிளெப்சில்லா நிமோனியாவுக்கு அளிக்கப்பட்ட ஆண்டிபயாடிக் மருந்துகளும் தங்கள் வீரியத்தை இழந்துவிட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

 மருத்துவர்களுக்கு அறிவுறுத்தல்

மருத்துவர்களுக்கு அறிவுறுத்தல்

இந்த நிலையில் ஆன்டிபயாடிக் மருந்துகள் தொடர்பாக மருத்துவர்களுக்கு புதிய அறிவுறுத்தலை ஐசிஎம்ஆர் வெளியிட்டு இருக்கிறது. அதன்படி, நோயாளிகளுக்கு லேசான காய்ச்சல், சளி இருந்தாலே ஆன்டிபயாடிக் மருந்துகள் உட்கொள்ள பரிந்துரை செய்வதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்து இருக்கிறது.

 எத்தனை நாட்கள்?

எத்தனை நாட்கள்?

ஐசிஎம்ஆர் வெளியிட்டு இருக்கும் இந்த புதிய வழிகாட்டுதல்களின்படி, தோல் மற்றும் மென்மையான திசு தொற்று நோய் போன்றவற்றுக்கு 5 நாட்களுக்கு மட்டுமே ஆன்டிபயாடிக் மருந்துகளை பரிந்துரைக்க வேண்டும். கம்யூனிட்டி அக்யூர்டு நிமோனியா காய்ச்சலுக்கு 5 நாட்களும் மருந்துகளை பரிந்துரைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆன்டிபயாடிக் சிகிச்சை

ஆன்டிபயாடிக் சிகிச்சை

மேலும் ஹாஸ்பிடல் அக்யூர்டு நிமோனியாவுக்கு 8 நாட்களுக்கு மட்டுமே ஆன்டிபயாடிக் மருந்துகளை பரிந்துரைக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறது. அதேபோல் தீவிர தொற்றும் இருப்பவர்களுக்கு மட்டுமே கண்காணிப்பின் அடிப்படையில் எம்பரிக் ஆண்டிபயாடிக் சிகிச்சையை தர வேண்டும் என்றும் ஐசிஎம்ஆர் குறிப்பிட்டு இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+