ஐபிஎல் பார்க்க எல்லை தாண்டிய ரசிகர்... வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் நுழைந்தார்... பரபர பின்னணி
டெல்லி: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை நேரில் பார்க்க ஆசைப்பட்டு வங்கதேசத்தை சேர்ந்த ரசிகர் ஒருவர் தரகரிடம் ரூ.5 ஆயிரம் கொடுத்து சர்வதேச எல்லையை தாண்டி இந்தியா வந்து எல்லை பாதுகாப்பு படையினரிடம் சிக்கிய சம்பவம் நடந்துள்ளது.
இந்தியாவில் 15வது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் போட்டி துவங்கி நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கிரிக்கெட் மைதானங்களில் போட்டிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.
சென்னை, மும்பை, பெங்களூர், கொல்கத்தா உள்பட 10 அணிகள் விளையாடுகின்றன. இந்த அணிகளில் பாகிஸ்தான் தவிர அனைத்து நாட்டு வீரர்களும் பங்கேற்பதால் இந்தியாவில் இருப்பது போன்று வெளிநாடுகளிலும் ஐபிஎல்லுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் தான் வங்கதேசத்தை சேர்ந்த ரசிகர் ஒருவர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை நேரில் பார்க்க வேண்டும் எல்லை தாண்டி இந்தியா வந்துள்ளார். யார் இவர்? எப்படி இந்தியாவுக்குள் நுழைந்தார்? என்பது பற்றிய முழுவிபரம் வருமாறு:

ஐபிஎல் பார்க்க ஆர்வம்
வங்கதேசத்தின் நாராயண்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பூர்வா சந்த்பூரை சேர்ந்தவர் எம்டி இப்ராஹிம் (வயது 31). கிரிக்கெட் விளையாடுவதில ஆர்வம் கொண்டவர். இவர் கிரிக்கெட் போட்டிகளையும் ஒன்று விடாமல் பார்ப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார். குறிப்பாக ஐபிஎல் உள்பட அனைத்து நாடுகளின் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளையும் ரசித்து வருகிறார். இந்நிலையில் இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை நேரில் பார்க்க விரும்பினார்.

எல்லை தாண்ட ரூ.5 ஆயிரம்
விமானத்தில் செல்ல வசதியில்லாததால் அவர் எல்லை தாண்டி இந்தியா வந்து ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை ரசிக்க முடிவு செய்தார். இதற்காக அவர் வங்கதேசத்தில் உள்ள தரகரை அணுகினார். அவரிடம் ரூ.5 ஆயிரம் கொடுத்த இப்ராஹிம் வங்கதேச நாட்டில் இருந்து எல்லை தாண்டி இந்தியாவுக்குள் நுழைந்தார்.

பிஎஸ்எப்பிடம் சிக்கினார்
மேலும் இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள வடக்கு 24 பர்கனஸ் மாவட்ட எல்லைக்குள் நுழைந்தார். அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட எல்லை பாதுகாப்பு படை வீரர்கள்(பிஎஸ்எப்) சந்தேகத்தின் அடிப்படையில் அவரை பிடித்து விசாரித்தனர். அப்போது ஐபிஎல் பார்க்க மும்பைக்கு செல்லும் ஆர்வத்தில் எல்லை தாண்டியது தெரியவந்தது.

வங்கதேசத்திடம் ஒப்படைப்பு
இதையடுத்து சம்பவம் குறித்து உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நல்லெண்ண அடிப்படையில் இப்ராஹிமை வங்கதேச நாட்டினரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி இம்ராஹிம் முறைப்படி வங்கதேசத்தின் எல்லையோர காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டார் என்று எல்லை பாதுகாப்பு படை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
-
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு












Click it and Unblock the Notifications