ரஃபேல் - ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி பா.ஜ.க. நாளை நாடு தழுவிய போராட்டம்
Recommended Video
டெல்லி: ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் விவகாரத்தில் ராகுல் காந்தி பொய் கூறியதற்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி நாளை நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என பாஜக அறிவித்துள்ளது.
ரஃபேர் போர் விமான கொள்முதல் விவகாரத்தில் முறைகேடு இல்லை என உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு அளித்திருந்தது. இத்தீர்ப்புக்கு எதிராக முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண்ஷோரி உள்ளிட்டோர் மறு ஆய்வு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இம்மனுக்களையும் உச்சநீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. மேலும் ரஃபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை உச்சநீதிமன்றம் திருடர் என கூறியதாக ராகுல் பேசியதற்கு எதிராக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் முடித்து வைக்கப்பட்டது.
இவ்வழக்கில் ராகுல் காந்தி மிகவும் எச்சரிக்கையுடன் பேச வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் கண்டிப்புடன் கூறியது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ரவிசங்கர் பிரசாத் இருவரும், நாட்டு மக்களிடம் பொய்யான தகவல்களை பரப்பிய ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர்.
ஆனால் ராகுல் காந்தியோ, நீதிபதி ஜோசப் தீர்ப்பை முன்வைத்து, ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்நிலையில் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி நாளை நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என பாரதிய ஜனதா கட்சி அறிவித்துள்ளது.
டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகம் முன்பாக இந்த போராட்டத்தை பாஜக நடத்த உள்ளது.
-
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி











Click it and Unblock the Notifications