ஆட்சி முடியும் முன்பு.. பொதுத் துறை வங்கிகளை விற்று விடுவார்கள்.. பட்ஜெட் பற்றி ப.சிதம்பரம் கருத்து
டெல்லி: பொதுத்துறை வங்கிகளில் இருந்து ரத்தம் வழிய வேண்டும்.. அப்போதுதான் அவற்றை தனியார்மயமாக்க முடியும் என்று மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.. 2021-22ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அதைத்தான் சொல்கிறது என்று கடுமையாக சாடியுள்ளார் முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம்.
பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முன்பாக, இன்று காலை ப.சிதம்பரம் கூறுகையில், பட்ஜெட்டில் எப்படியும் ஏமாற்றம்தான் கிடைக்கப்போகிறது. நல்லது நடக்க வாய்ப்பே இல்லை என்று கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில்தான் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு மாலை ஊடகங்களிடம் பேசிய ப.சிதம்பரம், இந்த பட்ஜெட்டில் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டினார்.

ரத்தம் வழிய விட்டுள்ளார்கள்
ரத்தம் வழிய வழிய பொதுத்துறை வங்கிகளை தவிக்க விட்டால்தான், அவற்றை தனியார்மயமாக்க முடியும் என்ற யுக்தியை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது. அரசு வங்கிகள் இல்லாவிட்டால் எப்படி கல்விக்கடன் கிடைக்கும்?, எப்படி விவசாய கடன் கிடைக்கும்? பாஜக அரசு தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு அனைத்து பொதுத்துறை வங்கிகளை விற்பனை செய்துவிடும்

மக்களை ஏமாற்றுகிறார்கள்
எங்கெல்லாம் தேர்தல் நடை பெறுகிறதோ அந்த மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களுக்கான திட்டங்களை நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்த திட்டங்கள் அனைத்துமே நீண்ட காலத்துக்கு செயல்படுத்த வேண்டியவை. எனவே தேர்தலுக்கு முன்பாக இதை அறிவித்தால் மட்டும் போதும். அதை செயல் படுத்த தேவையில்லை, என்று மக்களை முட்டாளாக்க நினைக்கிறார்கள்.

பணக்காரர்களுக்கு சாதகம்
ஜிஎஸ்டி வரி மீது வரி குறைப்புக்கான அறிவிப்பு இல்லை. இந்த பட்ஜெட் முழுக்க முழுக்க பணக்காரர்களுக்கு சாதகமாக இருக்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு இந்த பட்ஜெட் மக்களை கைவிட்டு விட்டது, பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறிக் கொள்கிறது. ஆனால் இது ஒரு தந்திரம்.

சிறு குறு தொழில்கள்
கொரோனா தடுப்பூசிக்கான செலவைதான் சேர்த்திருக்கிறார்கள். மற்றபடி சுகாதாரத் துறைக்கான செலவீனங்கள் குறைக்கப்பட்டுள்ளன. விவசாயம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் விவசாயத்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறைக்கப்பட்டுள்ளது. சிறு மற்றும் குறு தொழில்கள் புறக்கணிக்கப் பட்டுள்ளன. இவ்வாறு நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications