ரிஷப் பண்ட் பணம் கொள்ளையா? ஆம்புலன்ஸில் ஏறியபோது ஒப்படைத்தோம்.. காப்பாற்றிய பேருந்து ஓட்டுநர் பேட்டி
டெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்-ன் விபத்தில் சிக்கிய போது, அவரின் காரில் இருந்த பணம் மற்றும் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியது. ஆனால் ரிஷப் பண்டை காப்பாற்றி ஆம்புலன்ஸில் ஏற்றி அனுப்பி வைத்த பேருந்து ஓட்டுநர், ரிஷப் பண்ட் பணம் மற்றும் காரில் இருந்து சிதறிய பொருட்கள் அனைத்து ஆம்புலன்ஸில் ஏறிய போது அவரிடம் கொடுக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பின் நாடு திரும்பினார். நீண்ட நாட்களுக்கு பின் வீட்டிற்கு வந்த ரிஷப் பண்ட், உத்தரகாண்ட் மாநிலத்திற்கு சொந்த வேலை காரணமாக தனது பென்ஸ் காரில் பயணித்துள்ளார்.
ஓட்டுநர் இல்லாமல் தானாகவே ஓட்டிச் சென்ற ரிஷப் பண்ட், ஆங்கிலப் புத்தாண்டுக்கு முன் தனது தாயாருக்கு சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என்பதற்காக மீண்டும் தனது காரில் டெல்லி புறப்பட்டுள்ளார். நள்ளிரவில் புறப்பட்ட ரிஷப் பண்ட், மீண்டும் ஓட்டுநர் இல்லாமல் தானாகவே காரை ஓட்டி வந்துள்ளார்.

அதிவேகத்தில் வந்த ரிஷப் பண்ட்
தேசிய நெடுஞ்சாலையில் மங்களார் - நார்சன் பகுதிக்கு இடையே வந்துகொண்டிருந்த போது, காலை 5.30 மணியளவில் திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் சென்டர் மீடியனில் மோதியுள்ளது. அதிவேகத்தில் வந்த கார் திடீரென விபத்தில் சிக்கியதால், எதிர்முனைக்கு பறந்தது. இந்த விபத்தால் காரில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.

ரிஷப் பண்டை காப்பாறிய பேருந்து ஓட்டுநர்
இதனால் அதிர்ச்சியடைந்த ரிஷப் பண்ட், காரின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து கொண்டு வேகமாக குதித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ரிஷப் பண்ட் காரில் சீட் பெல்ட் அணியவில்லை. ஜன்னிலை உடைத்து வெளியே குதித்த ரிஷப் பண்டிற்கு முதுகு, தலை, கால் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ரத்த வெள்ளத்தில் இருந்த ரிஷப் பண்டை, பேருந்து ஓட்டுநர் ஒருவர் தூக்கி பாதுகாப்பான இடத்தில் படுக்க வைத்துள்ளார்.

ரிஷப் பணம் கொள்ளை?
பின்னர் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, அருகில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து ரிஷப் பண்டிற்கு டெல்லியில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டு, சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே ரிஷப் பண்டிற்கு விபத்து ஏற்பட்ட போது, அவரிடம் இருந்த பொருட்களையும், பணத்தையும் சிலர் திருடி சென்றதாக தகவல் வெளியாகியது. இதனையறிந்து ரசிகர்கள், இந்தியாவில் மனிதம் இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு திட்டி வந்தனர்.

ரிஷப் பண்ட் பணம் ஒப்படைப்பு
இந்த நிலையில் ரிஷப் பண்டை காப்பாற்றிய பேருந்து ஓட்டுநர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கியதை பார்த்தேன். அவர் காரில் இருந்து வெளியேறி வந்த போது, பேருந்தை நிறுத்திவிட்டு அவருக்கு உதவி செய்தேன். பின்னர் அவரை பாதுகாப்பான இடத்தில் படுக்க வைத்திவிட்டு, ஆம்புலன்ஸை அழைத்தேன். ஆம்புலன்ஸ் வாகனம் வந்த பின், காரில் இருந்து சிதறிய பொருட்களையும், ரூ.7 ஆயிரம் பணத்தையும் அவரின் கைகளில் ஒப்படைத்தேன் என்று தெரிவித்துள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications