Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'சிபிஐ, அமலாக்கத்துறை கூண்டு கிளிகள் என யாருங்க சொன்னது'.. சுதந்திரமாக இயங்குகிறது.. பாஜக ஓபன் டாக்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை பாஜகவின் கைப்பாவையாக செயல்படுகிறது என்ற எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்கு பதில் அளித்த முக்தார் அப்பாஸ் நக்வி, ''சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை போன்ற அமைப்புகள் கூண்டுக்கிளிகள் கிடையாது. எந்த பாரபட்சமும் இன்றி இந்த விசாரணை அமைப்புகள் தங்கள் கடமைகளை செய்து வருகின்றன'' என்றும் கூறியுள்ளார்.

சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தனது கைப்பாவை போல பயன்படுத்தி வருகிறது என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.

ஆளும் பாஜக அரசு தனது அரசியல் எதிரிகளை மிரட்டவும் அச்சுறுத்தவும் அமலாக்கத்துறையும் சிபிஐ அமைப்பையும் ஏவி விடுவதாக மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல முன்னணி அரசியல் தலைவர்களின் விமர்சனமாக உள்ளது. ஆனால், இந்த விமர்சனங்களை மத்திய அரசு மறுத்து வருகிறது.

கூண்டு கிளிகள் கிடையாது

கூண்டு கிளிகள் கிடையாது

இந்த நிலையில், பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான முக்தார் அப்பாஸ் நக்வியும் இதே கருத்தை பிரதிபலித்து இருக்கிறார். உத்தர பிரதேசத்தின் மொரதாபாத் நகரில் பேசிய முக்தார் அப்பாஸ் நக்வி கூறியதாவது:- ''சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை போன்ற அமைப்புகள் கூண்டுக்கிளிகள் கிடையாது. சட்டத்தின் அணிகலன்களாக தற்போது இந்த அமைப்புகள் மாறியுள்ளன. எந்த பாரபட்சமும் இன்றி இந்த விசாரணை அமைப்புகள் தங்கள் கடமைகளை செய்து வருகின்றன'' என்றார்.

அடிப்படை ஆதாரமற்ற

அடிப்படை ஆதாரமற்ற

அப்போது எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த முக்தார் அப்பாஸ் நக்வி, ''ஊழல் முறைகேட்டில் சாம்பியன்களான இவர்களுக்கு தற்போது பிரச்சினை எழுந்துள்ளதால், அடிப்படை ஆதாரமற்ற இது போன்ற விமர்சனங்களை விசாரணை அமைப்புகளுக்கு எதிராக முன்வைக்கின்றனர்'' என்றார்.

 ஒருங்கிணைந்து தோற்கடிக்க வேண்டும்

ஒருங்கிணைந்து தோற்கடிக்க வேண்டும்

உத்தர பிரதேசத்தில் உள்ள மதராசாக்கள் மற்றும் வக்பு வாரிய சொத்துக்களை சர்வே செய்யும் மாநில அரசின் முடிவுக்கு விமர்சனங்கள் எழும்பியுள்ளன. இது குறித்து கருத்து தெரிவித்த முக்தார் அப்பாஸ் நக்வி கூறியதாவது:- ''ஒவ்வொருவரின் அரசியல் அமைப்பு உரிமைகளும் முற்றிலும் பாதுகாப்பாக உள்ளது. நாட்டின் நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் சதிச்செயலில் பி.எப்.ஐ உள்ளிட்ட அமைப்புகள் ஈடுபட்டுள்ளன. எனவே, இதுபோன்ற தீங்கும் விளைவிக்கும் அமைப்புகளை நாம் அனைவரும் ஒருங்கிணைந்து தோற்கடிக்க வேண்டும்.

மிகப்பெரிய எதிரிகளாக உள்ளனர்

மிகப்பெரிய எதிரிகளாக உள்ளனர்

தங்களின் பாதுகாப்பு கேடயமாக மதத்தை பயன்படுத்துபவர்கள்தான் தேசத்திற்கும் ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் மிகப்பெரிய எதிரிகளாக உள்ளனர்'' என்றார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் சிறுபான்மையின நலத்துறை அமைச்சராக இருந்த முக்தார் அப்பாஸ் நக்வி கடந்த ஜூலை 2022 ஆம் ஆண்டு அப்பதவியில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+