மீண்டும் மீண்டும் வஞ்சிக்கப்படும் தமிழகம்.. கேரளத்தில் புதிய அணை ஆய்வுக்கு மத்திய அரசு அனுமதி
Recommended Video

டெல்லி: கேரளத்தில் முல்லை பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டுவதற்கான ஆய்வு நடத்த மத்திய அரசு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.
முல்லை பெரியாறு அணை வலுவிழந்துவிட்டதாக கூறி அணையின் நீர்மட்டத்தை கேரள அரசு 136 அடியாகக் குறைத்தது. இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்று கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் முல்லை பெரியாறு அணைக்குப் பதிலாக புதிய அணை கட்ட எந்த முயற்சியும் மேற்கொள்ளக்கூடாது என்று ஐந்து நீதிபதிகள் அமர்வு கண்டிப்பாக உத்தரவிட்டது.

இந்த நிலையில் முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட கேரள அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. அணை கட்டுவது தொடர்பாக ஆய்வு நடத்த அனுமதி கோரி மத்திய வனம், சுற்றுச்சூழல் துறையிடம் கேரள அரசு விண்ணப்பித்தது. இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கவில்லை.
எனினும் மத்திய அரசு அனுமதி வழங்கிவிட்டதாக கேரள அரசு அவ்வப்போது தகவல்களை வெளியிட்டு வந்தது. இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டுவதற்கான ஆய்வை 7 நிபந்தனைகளுடன் மேற்கொள்ள கேரளாவுக்கு மத்திய சுற்றுசூழல்துறை அனுமதி அளித்துள்ளது.
இதனால் தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது வேதனை அளிப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். எனினும் இதை தமிழக அரசு மறுத்துள்ளது. அணை ஆய்வுக்கு மத்திய அரசு அனுமதி ஏதும் வழங்கப்படவில்லை என்றே தமிழக அரசு கூறுகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications