சென்னை, கோவை, செங்கல்பட்டில்.. ஜெட் வேகத்தில் உயருகிறது பாதிப்பு.. ஷாக் கொடுக்கும் மத்திய அரசு!
டெல்லி: கடந்த இரண்டு வாரங்களில் தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, கோவை ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா 3,62,727 புதிய வழக்குகளை பதிவு செய்தது.கொரோனா காரணமாக 4,120 உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.
கடந்த ஏழு நாட்களில் தினசரி புதிய பாதிப்புகளின் வளர்ச்சி விகிதம் 1.13% ஆக இருந்தது என்றும் தினசரி புதிய உயிரிழப்பு வளர்ச்சி விகிதம் 1.68% ஆக உள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சம் கூறியுள்ளது.

ஆக்டிவ் கேஸ்கள் அதிகம்
வியாழக்கிழமை நிலவரப்படி கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், ஆந்திரா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், குஜராத், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்கள் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன. கோவா அனைத்து இந்திய மாநிலங்களிடையேயும் அதிக நேர்மறை விகிதத்தை(48.1%) கொண்டுள்ளது. புதுச்சேரி 42.5% ஆக இரண்டாவது மிக உயர்ந்த நேர்மறை விகிதத்தைக் கொண்டுள்ளது.

சென்னைக்கு காட்டும் அபாயம்
கடந்த இரண்டு வாரங்களில் தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, கோவை ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இது தவிர கேரளாவின் எர்ணாகுளம், மலப்புரம், கொல்லம், பாலக்காடு கண்ணூர், மேற்கு வங்கத்தின் பரகனாஸ் வடக்கு, கொல்கத்தா, ஜெய்ப்பூர் (ராஜஸ்தான்), அகமதுநகர் (மகாராஷ்டிரா), டெஹ்ராடூன், (உத்தரகண்ட்), கிழக்கு கோதாவரி (ஆந்திரா) ஆகிய மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன என்று தரவுகள் சுட்டிகாட்டுகின்றன.

மகாராஷ்டிராவில் குறையும் பாதிப்பு
அதே வேளையில் மகாராஷ்டிராவின் நாக்பூர், நாசிக், தானே ஜல்கான் மற்றும் சந்திரபூர் மாவட்டங்களில் கடந்த இரண்டு வாரங்களில் தினசரி கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ளதாக ஆறுதல் தெரிவித்துள்ளது. குஜராத்தின் அஹமதாபாத், சூரத், வாரணாசி, கோரக்பூர், மத்திய பிரதேசத்தின் குவாலியர், போபால், இந்தூர் மற்றும் லக்னோ (உத்தரபிரதேசம்), ஆல்வார் (ராஜஸ்தான்), ராஞ்சி (ஜார்க்கண்ட்) ஆகிய மாவட்டங்களிலும் பாதிப்பு குறைந்துள்ளது. கடந்த 2 வாரங்களில் 187 மாவட்டங்களில் பாதிப்பு குறைந்துள்ளது.

கர்நாடகா மோசம்
கேரளா, ஒடிசா, பஞ்சாப், இமாச்சல பிரதேசம், மேற்கு வங்கம், தமிழ்நாடு, புதுச்சேரி, அசாம் கர்நாடகம் மற்றும் மணிப்பூர் ஆகியவை ஒன்பது மாநிலங்களில் தினசரி பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், கோவா, சண்டிகர், உத்தரகண்ட், ஜம்மு, காஷ்மீர், மற்றும் லடாக் ஆகிய இடங்களில் தினசரி புதிய பாதிப்புகள் சரிவைக் கண்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications