கொரோனா களத்தில் மருத்துவ மாணவர்கள்.. சுகாதார பணியாளர்கள் அழுத்தத்தை குறைக்க.. மத்திய அரசு முடிவு
டெல்லி: நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் பணிகளில், மருத்துவ மாணவர்களை ஈடுபடுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் தற்போது கொரோனா பரவின் 2ஆம் அலை ஏற்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களிலும் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பியுள்ளது. இது நாட்டிலுள்ள சுகாதாரத் துறை கட்டமைப்பில் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்களில் சுகாதார பணியாளர்கள் தினசரி 16 மணி நேரம் வரை பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் போதிய அளவில் சுகாதாரத் துறை ஊழியர்கள் இல்லாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பல முடிவுகள் எடுக்கப்பட்டன.
நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் பணிகளில், மருத்துவ மாணவர்களை ஈடுபடுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது சுகாதார பணியாளர்களின் அழுத்தத்தைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா சிகிச்சை பணிகளில் 100 நாட்கள் ஈடுபடுபவர்களுக்கு வரும் காலங்களில் அரசுப் பணியில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், இதன் காரணமாக மருத்துவ மேற்படிப்புக்கான, 'நீட்' தேர்வு வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நடைபெறாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், நர்சிங் கல்லூரிகளில் இறுதி ஆண்டு படிப்பவர்களையும் கொரோனா சிகிச்சை அளிக்கப் பயன்படுத்த மத்தி அரசு முடிவு செய்துள்ளது. இதில் பங்கேற்போருக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அரசுப் பணிகளில் சேர முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications