விரைவில் வருது கோவின் 2.0... தடுப்பூசி போடும் பணிகள்... வேகப்படுத்தும் மத்திய அரசு
டெல்லி : மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவுபடுத்துமாறு மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடும் பணியை பிப்ரவரி 20 ம் தேதிக்கு முன்னதாக முடிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி ஜனவரி 16 ல் துவங்கப்பட்டது. முதல்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. விரைவில் 2வது கட்டமாக தடுப்பூசி போடும் பணி துவங்கப்பட உள்ளது.

இந்நிலையில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் ஜனவரி 16 ம் தேதி தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள், பிப்ரவரி 13 ம் தேதி இரண்டாவது டோசை போட்டுக் கொள்கிறார்களா னெ்பதையும் உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சராசரியாக ஒரு நாளைக்கு எத்தனை பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது என்பதை கண்காணித்து, அதன் வேகத்தை அதிகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மாநில சுகாதாரத்துறை செயலாளர்களை கேட்டுக் கொள்கிறோம். தடுப்பூசி போட்டுக் கொள்ள பதிவு செய்தவர்களில் 100 சதவீதம் பேர் போட்டுக் கொள்கிறார்களா என்பதை மாநில அரசுகள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
தொடர் ஆய்வுக் கூட்டங்களும் மாநில, மாவட்டவாரியாக நடத்தப்பட வேண்டும். குறைந்தபட்சம் பிப்ரவரி 20 ம் தேதிக்கு முன் அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும். மார்ச் 6 ம் தேதிக்கு முன் அனைத்து முன் களப்பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டிருக்க வேண்டும். முதல்கட்டத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ள தவறியவர்கள், வயது வாரியான பிரிவுகளில் கட்டாயமாக போட்டுக் கொள்ள செய்ய வேண்டும்.
முதல் டோஸ் போட்டுக் கொண்டவர்களுக்கு டிஜிட்டல் சான்று வழங்கப்பட வேண்டும். இரண்டாவது டோஸ் போட்டுக் கொண்ட பிறகு இறுதி டிஜிட்டல் சான்று வழங்கப்பட வேண்டும். விரைவில் கோவின் 2.0 வெர்சன் வெளியிடப்பட உள்ளது. இவ்வாறு சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications