மருத்துவர்கள், பொதுமக்களுக்கு ஊக்கம்.. மே 3ல் அணிவகுக்கும் முப்படைகள்.. பிபின் ராவத் அசத்தல் தகவல்
டெல்லி: கொரோனா பாதிப்புக்கு எதிராக போராடி வரும் மருத்துவர்கள் மற்றும் நாட்டு மக்களுடன் முப்படைகளும் கைகோர்த்து உற்சாகப்படுத்த உள்ளதாக, இந்தியாவின் ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் முப்படை தளபதிகள் இணைந்து தெரிவித்தனர்.
இன்று மாலை 6 மணிக்கு கூட்டாக செய்தியாளர்களை இவர்கள் சந்திக்க உள்ளதாக மாலை திடீரென அறிவிக்கப்பட்டது. முக்கியமான ஒரு விஷயம் தொடர்பாக அவர்கள் அறிவிப்பு வெளியிட உள்ளதாக ஏஎன்ஐ செய்தி ஏஜென்சி தெரிவித்திருந்தது.

பொதுவாக சாதாரண விஷயங்களுக்காக முப்படை தளபதிகள் இணைந்து செய்தியாளர் சந்திப்பு நிகழ்ந்தது கிடையாது என்பதால், இது மிகுந்த முக்கியத்துவம் பெற்றது.
இந்த நிலையில், மாலை 6 மணிக்கு தளபதிகளுடன், அமர்ந்து, தனது பேட்டி வீடியோவை வெளியிட்டார், பிபின் ராவத்.
அப்போது அவர் கூறியதாவது: கொரோனா வைரஸ் பிரச்சினைக்கு எதிராக ஒட்டுமொத்த இந்தியாவும் தனது ஒற்றுமையை காட்டி வருகிறது. மருத்துவ பணியாளர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில், பொதுமக்கள் கைகள் தட்டியும், விளக்கை ஏற்றியும், தங்கள் ஒற்றுமையை காட்டியுள்ளனர்.
ராணுவம் தங்கள் பங்குக்கு மருத்துவ பணியாளர்களுக்கு மற்றும் இந்தப் பிரச்சினையில் முன்னிலையில் நின்று செயல்படக்கூடிய ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறது. இதை செயலில் காட்டும் விதமாக, மே 3ஆம் தேதி முப்படைகளும் ஒவ்வொரு வகையில் வெளிப்படுத்த உள்ளனர்.
மே 3ஆம் தேதி மாலை, கடற்படையின் போர்க்கப்பல்களில், ஒளிவிளக்குகள் மிளிரும். அவற்றின் ஹெலிகாப்டர்கள், மருத்துவமனைகள் மீது மலர்களைத் தூவிச் செல்லும். இதேபோன்று, விமானப்படை விமானங்கள், ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் முதல், கேரளாவின் திருவனந்தபுரம் வரை வடக்கிலிருந்து தெற்காக அணிவகுத்து பறந்து செல்லும். மற்றொரு மார்க்கத்தில், கிழக்கே அஸ்ஸாம் மாநிலம் திப்ருகார் பகுதியிலிருந்து மேற்கே குஜராத் மாநிலம் கட்ச் வரை விமானங்கள் பறந்து செல்லும். இதில் ராணுவத்தின் சரக்கு மற்றும் போர் விமானங்களும் இடம் பெற்றிருக்கும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications