சிபிஐ இடைக்கால இயக்குநர் நியமன வழக்கு.. விசாரிக்க விரும்பலை.. விலகினார் தலைமை நீதிபதி
டெல்லி: சிபிஐ இடைக்கால இயக்குநர் நியமனத்தை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மறுத்து விட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் மிக மிக முக்கியமான சுயேச்சையான துறைகளில் மிக முக்கியமானது சிபிஐ. இதன் இயக்குநராக இருந்தவர் அலோக் வெர்மா.
ஆனால் இவரது செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்த மத்திய அரசு அதிரடியாக ராகேஷ் அஸ்தானாவை சிறப்பு இயக்குநராக நியமித்தது.

அதிகார மோதல்
இருவருக்கும் இடையே அதிகார மோதல் வெடித்ததைத் தொடர்ந்து இருவரையும் கட்டாய விடுப்பில் அனுப்பியது மத்திய அரசு. இதை எதிர்த்து அலோக் வெர்மா சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். அதை விசாரித்த சுப்ரீம் கோர்ட் மத்திய அரசின் உத்தரவை செல்லாது என்று அறிவித்தது. இதனால் அலோக் வெர்மா மீண்டும் இயக்குநரானார்.

கோர்ட்டில் வழக்கு
ஆனால் அலோக் வெர்மாவை அதிரடியாக இடமாற்றம் செய்து பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக் குழு உத்தரவிட்டது. தற்காலிக இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அது இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான முதன்மை அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

விசாரிக்க மறுப்பு
அப்போது சிபிஐ இயக்குநரை தேர்வு செய்யும் குழுவில் தான் உறுப்பினராக இருப்பதால் இந்த வழக்கை விசாரிக்க முடியாது என்று ரஞ்சன் கோகாய் தெரிவித்துவிட்டார். வேறு அமர்வு இந்த வழக்கை விசாரிக்கும் என்று சொல்லி இந்த வழக்கை ஏற்று நடத்த மறுப்பு தெரிவித்த நீதிபதி, வரும் 24-ம் தேதி 2-வது அமர்வு விசாரிக்கும் இதனை விசாரிக்கும் என்று சொல்லி ஒத்தி வைத்தார். சிபிஐ இயக்குநர் நியமனத்தில் வெளிப்படையான தன்மை தேவை என்றும் தலைமை நீதிபதி கருத்து தெரிவித்தார்.

பெரும் அதிர்ச்சி
நாளை புதிய சிபிஐ இயக்குனரை நியமிக்க, பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட கூட்டம் நடக்க உள்ள நிலையில் தலைமை நீதிபதியின் இந்த அதிரடி முடிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே அலோக் வெர்மா இடமாற்ற முடிவை எடுத்த பிரதமர் மோடி கூட்டத்தில் நீதிபதி ரஞ்சன் கோகோய் பங்கேற்காதது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications