52 ஆண்டு வரலாறு.. தேசியக் கொடியை டிபி-யாக வைக்காத ஆர்எஸ்எஸ்.. மறைமுகமாக சாடிய ராகுல் காந்தி!
டெல்லி: சமூக வலைதளங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தேசியக் கொடியை முகப்பு படமாக வைக்காதது குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பேசியுள்ளார்.
நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் கடந்த 2ம் தேதி முதல் 15ம் தேதி வரை மக்கள் அனைவரும் தங்கள் சமூக ஊடக கணக்கின் முகப்பு புகைப்படத்தை தேசியக்கொடியாக மாற்றிட பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார். அதன்படி அவரும், பாஜக தலைவர்களும் தங்கள் சமூக ஊடக கணக்கு பக்கங்களின் முகப்பு படங்களை மாற்றி வருகின்றனர்.

அதேபோல் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மற்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் தங்களுடைய சமூக ஊடக கணக்கு பக்கங்களின் முகப்பு படங்களை மாற்றி உள்ளனர்.
இதனிடையே இந்தியக் கொடியை தயாரித்து வழங்குவதற்கு அங்கீகாரம் பெற்ற இந்தியாவின் ஒரே அலுவலகமான கர்நாடக காதி கிராமோத்யோக சம்யுக்தா சங்கத்திற்கு ராகுல் காந்தி சென்று பார்வையிட்டார். அந்த நேரத்தில் நேஷனல் ஹெரால்டு தலைமை அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள யங் இந்தியா நிறுவனத்திற்கு அமலாக்கத்துறையினர் சீல் வைத்தனர்.
இந்த நிலையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், இல்லம்தோறும் மூவர்ணக் கொடி என்னும் பிரச்சாரத்தை நடத்தும் நபர்கள் 52 ஆண்டுகளாக தேசியக் கொடியை ஏற்றாத தேச விரோத அமைப்பில் இருந்து வந்தவர்கள் என்பதற்கு வரலாறு சாட்சியாக இருக்கிறது. சுதந்திரப் போராட்டத்தின் போது காங்கிரஸை அவர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை. இன்றும் தடுக்க முடியாது என்று ஆர்எஸ்எஸ் இயக்கத்தை மறைமுகமாக சாடியுள்ளார்.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள ஆர்எஸ்எஸ் அமைப்பு, இதுபோன்ற விவகாரங்களை அரசியலாக்கக் கூடாது. ஏற்கனவே ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பாக 75 ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டம் மற்றும் இல்லம்தோறும் மூவர்ணக் கொடி என்னும் பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்கப்பட்டுள்ளது. அரசு, தனியார் அமைப்புகள் மூலம் சுதந்திர தினக் கொண்டாட்டம் தொடர்பாக நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தை நாங்கள் எங்கள் வழியில் கையாண்டு வருகிறோம். ஆர்எஸ்எஸ் அமைப்பு கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகிறது. ஏற்கனவே இதுதொடர்பான எங்களின் நிலைபாட்டை தெரிவித்துள்ளோம் என்று கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் சமூக வலைதளங்களில் தேசியக் கொடியை முகப்பு படமாக வைக்கவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதேபோல் ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்தில் இதுநாள் வரை தேசியக் கொடி ஏற்றியதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
Sonia Gandhi: சோனியா காந்தி மருத்துவமனையில் திடீர் அனுமதி.. ஹாஸ்பிடலுக்கு விரைந்த ராகுல், பிரியங்கா! -
ஶ்ரீபெரும்புதூரை குறிவைத்த விசிக.. தொகுதி மாறும் செல்வப்பெருந்தகை.. எங்கு தெரியுமா -
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
கொங்கு மண்டலத்தில் 5, சென்னை 1, மதுரை 1, சேலம் 0.. பாஜகவை கன்ட்ரோலில் எடுத்த எடப்பாடி பழனிசாமி! -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்?











Click it and Unblock the Notifications