Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

52 ஆண்டு வரலாறு.. தேசியக் கொடியை டிபி-யாக வைக்காத ஆர்எஸ்எஸ்.. மறைமுகமாக சாடிய ராகுல் காந்தி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சமூக வலைதளங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தேசியக் கொடியை முகப்பு படமாக வைக்காதது குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பேசியுள்ளார்.

நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் கடந்த 2ம் தேதி முதல் 15ம் தேதி வரை மக்கள் அனைவரும் தங்கள் சமூக ஊடக கணக்கின் முகப்பு புகைப்படத்தை தேசியக்கொடியாக மாற்றிட பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார். அதன்படி அவரும், பாஜக தலைவர்களும் தங்கள் சமூக ஊடக கணக்கு பக்கங்களின் முகப்பு படங்களை மாற்றி வருகின்றனர்.

Congress MP Rahul Gandhi takes dig at BJP, RSS over Har Ghar Tiranga campaign

அதேபோல் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மற்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் தங்களுடைய சமூக ஊடக கணக்கு பக்கங்களின் முகப்பு படங்களை மாற்றி உள்ளனர்.

இதனிடையே இந்தியக் கொடியை தயாரித்து வழங்குவதற்கு அங்கீகாரம் பெற்ற இந்தியாவின் ஒரே அலுவலகமான கர்நாடக காதி கிராமோத்யோக சம்யுக்தா சங்கத்திற்கு ராகுல் காந்தி சென்று பார்வையிட்டார். அந்த நேரத்தில் நேஷனல் ஹெரால்டு தலைமை அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள யங் இந்தியா நிறுவனத்திற்கு அமலாக்கத்துறையினர் சீல் வைத்தனர்.

இந்த நிலையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், இல்லம்தோறும் மூவர்ணக் கொடி என்னும் பிரச்சாரத்தை நடத்தும் நபர்கள் 52 ஆண்டுகளாக தேசியக் கொடியை ஏற்றாத தேச விரோத அமைப்பில் இருந்து வந்தவர்கள் என்பதற்கு வரலாறு சாட்சியாக இருக்கிறது. சுதந்திரப் போராட்டத்தின் போது காங்கிரஸை அவர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை. இன்றும் தடுக்க முடியாது என்று ஆர்எஸ்எஸ் இயக்கத்தை மறைமுகமாக சாடியுள்ளார்.

Congress MP Rahul Gandhi takes dig at BJP, RSS over Har Ghar Tiranga campaign

இதுகுறித்து விளக்கமளித்துள்ள ஆர்எஸ்எஸ் அமைப்பு, இதுபோன்ற விவகாரங்களை அரசியலாக்கக் கூடாது. ஏற்கனவே ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பாக 75 ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டம் மற்றும் இல்லம்தோறும் மூவர்ணக் கொடி என்னும் பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்கப்பட்டுள்ளது. அரசு, தனியார் அமைப்புகள் மூலம் சுதந்திர தினக் கொண்டாட்டம் தொடர்பாக நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தை நாங்கள் எங்கள் வழியில் கையாண்டு வருகிறோம். ஆர்எஸ்எஸ் அமைப்பு கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகிறது. ஏற்கனவே இதுதொடர்பான எங்களின் நிலைபாட்டை தெரிவித்துள்ளோம் என்று கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் சமூக வலைதளங்களில் தேசியக் கொடியை முகப்பு படமாக வைக்கவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதேபோல் ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்தில் இதுநாள் வரை தேசியக் கொடி ஏற்றியதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+