3 மாசம்தான்.. கொரோனா தடுப்பூசி வருகிறது.. முதலில் யாருக்கெல்லாம் கிடைக்கும்- ஹர்ஷ் வர்த்தன் விளக்கம்
டெல்லி: இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் கொரோனா தடுப்பூசி இந்தியாவில் வினியோகத்திற்கு வந்துவிடும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று நிருபர்களிடம் அவர் பேசுகையில், மேலும் அவர் கூறியதாவது: 135 கோடி இந்தியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்க ஆயத்தமாகி வருகிறோம்.
எந்த பிரிவினருக்கு முதல் கட்டமாக தடுப்பூசி கொடுப்பது என்பதை அறிவியல் பூர்வ அடிப்படையில் முடிவெடுப்போம்.

முன்கள பணியாளர்கள்
கொரோனா முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களுக்குத்தான் முதலில் மருந்து வழங்கப்படும். இதன்பிறகு, முதியவர்கள் மற்றும், பிற இணை நோய்கள் உள்ள மக்களுக்கு தடுப்பூசி வழங்குவதில் முன்னுரிமை வழங்குவோம்.

வினியோக ஏற்பாடு
வேக்சின் சப்ளை குறித்து விரிவான ஆலோசனைகள் நடந்து வருகின்றன. வேக்சின் பற்றி வீடியோ மூலம் ஆலோசிக்க ஏற்பாடுகளை செய்து வைத்துள்ளோம். ப்ளூ பிரிண்ட் தயாரிக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது.

2021 நல்ல ஆண்டு
மொத்தத்தில், 2021ம் ஆண்டு, அனைத்து மக்களுக்கும் நல்ல ஆண்டாக பிறக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. மத்திய அரசு தொடர்ந்து சிறப்பாக நடவடிக்கை எடுத்து கொரோனா பாதிப்பை குறைத்துள்ளது.

மோடி முயற்சி
மக்கள் ஊரடங்கு என்ற பெயரில் மார்ச் மாதம், பிரதமர் மோடி துவங்கிய முயற்சி அருமையானது. மக்களின் பங்களிப்போடு கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். 150 கோடி டோஸ் மருந்துகளை வாங்குவதற்கான ஒப்பந்தங்களை இந்தியா இறுதி செய்துள்ளது என்று அமெரிக்காவின் புகழ் பெற்ற பத்திரிக்கையான வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications