3 மாசம்தான்.. கொரோனா தடுப்பூசி வருகிறது.. முதலில் யாருக்கெல்லாம் கிடைக்கும்- ஹர்ஷ் வர்த்தன் விளக்கம்
டெல்லி: இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் கொரோனா தடுப்பூசி இந்தியாவில் வினியோகத்திற்கு வந்துவிடும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று நிருபர்களிடம் அவர் பேசுகையில், மேலும் அவர் கூறியதாவது: 135 கோடி இந்தியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்க ஆயத்தமாகி வருகிறோம்.
எந்த பிரிவினருக்கு முதல் கட்டமாக தடுப்பூசி கொடுப்பது என்பதை அறிவியல் பூர்வ அடிப்படையில் முடிவெடுப்போம்.

முன்கள பணியாளர்கள்
கொரோனா முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களுக்குத்தான் முதலில் மருந்து வழங்கப்படும். இதன்பிறகு, முதியவர்கள் மற்றும், பிற இணை நோய்கள் உள்ள மக்களுக்கு தடுப்பூசி வழங்குவதில் முன்னுரிமை வழங்குவோம்.

வினியோக ஏற்பாடு
வேக்சின் சப்ளை குறித்து விரிவான ஆலோசனைகள் நடந்து வருகின்றன. வேக்சின் பற்றி வீடியோ மூலம் ஆலோசிக்க ஏற்பாடுகளை செய்து வைத்துள்ளோம். ப்ளூ பிரிண்ட் தயாரிக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது.

2021 நல்ல ஆண்டு
மொத்தத்தில், 2021ம் ஆண்டு, அனைத்து மக்களுக்கும் நல்ல ஆண்டாக பிறக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. மத்திய அரசு தொடர்ந்து சிறப்பாக நடவடிக்கை எடுத்து கொரோனா பாதிப்பை குறைத்துள்ளது.

மோடி முயற்சி
மக்கள் ஊரடங்கு என்ற பெயரில் மார்ச் மாதம், பிரதமர் மோடி துவங்கிய முயற்சி அருமையானது. மக்களின் பங்களிப்போடு கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். 150 கோடி டோஸ் மருந்துகளை வாங்குவதற்கான ஒப்பந்தங்களை இந்தியா இறுதி செய்துள்ளது என்று அமெரிக்காவின் புகழ் பெற்ற பத்திரிக்கையான வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications