இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,583 ஆக உயர்வு
டெல்லி : இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 46,711 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,583 ஆகவும் உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொடர்பான பரிசோதனைகள் அதிகரித்திருக்கின்றன. இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது என்பது மாநில அரசுகளின் கருத்து.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 46,711 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,583 ஆகவும் அதிகரித்துள்ளது.

குஜராத்தில் 319 பேர் பலி
மகாராஷ்டிராவில் மிக அதிகபட்சமாக 14,541 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் மொத்தம் 583 பேர் உயிரிழந்துள்ளனர். இம்மாநிலத்தில் இதுவரை 2465 பேர் குணமடைந்துள்ளனர். குஜராத் மாநிலத்தில் மொத்தம் 5804 பேர் பாதிக்கப்பட்டும் 319 பேர் உயிரிழந்தும் உள்ளனர். டெல்லியில் கொரோனாவுக்க்கு 64 பேர் மரணமடைந்துள்ளனர். இதுவரை 4898 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

தமிழகத்தில் கிடுகிடு உயர்வு
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 500க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3550 ஆகவும் அதிகரித்தது. தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை 31 பேர் மரணமடைந்திருக்கின்றனர். ராஜஸ்தானில் மொத்தம் 3061 பேர் பாதிக்கப்பட்டும் 77 பேர் உயிரிழந்தும் உள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் 2766 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்; 50 பேர் மரணித்துள்ளனர்.

ஆந்திராவில் அதிகரிப்பு
ஆந்திராவில் 1717 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது இங்கு 36 பேர் பலியாகி உள்ளனர். தெலுங்கானாவில் 1085 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இதுவரை 29 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மேற்கு வங்கத்தில் 1259 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மொத்தம் 133 பேர் கொரோனாவால் மாண்டு போயுள்ளனர்.

பாதிப்பு இல்லாத கோவா
27 பேரை பலி கொண்ட கர்நாடகாவில் 659 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; கேரளாவில் 500 பேர் பாதிக்கப்பட்டு 462 பேர் குணமடைந்துள்ளனர். 4 பேர் மட்டும் கேரளாவில் மரணித்துள்ளனர். கோவாவில் கொரோனாவால் 7 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டனர். தற்போது 7 பேரும் குணமடைந்துள்ளதால் கொரோனா பாதிப்பு இல்லாத மாநிலமாகி உள்ளது கோவா.

பஞ்சாப்பிலும் அதிகரிப்பு
பஞ்சாப் மாநிலத்தில் 1233 பேர்; ஒடிஷாவில் 169; ஹரியானாவில் 517; பீகாரில் 528 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அஸ்ஸாமில் 43 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 32 பேர் குணமடைந்துள்ளனர். சண்டிகரில் 102 பேர் கொரோனா பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். வடகிழக்கு மாநிலங்களில் அதிகபட்சமாக மேகாலயாவில் 12 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
-
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications