கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை வெளி சந்தைகளில் விற்க மத்திய அரசு அனுமதி...நிபந்தனைகள் விதிப்பு
இந்தியாவில் பொதுமக்களுக்கு செலுத்தப்படும் கொரோனா தடுப்பூசிகளான கோவிஷீல்டு, கோவாக்சினை சந்தையில் விற்க நிபந்தனைகளுடன் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
டெல்லி: கொரோனா தடுப்பூசிகளான கோவிஷீல்டு, கோவாக்சினை சந்தையில் விற்க நிபந்தனைகளுடன் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் இனி மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகள் நேரடியாக கொரோனா தடுப்பூசிகளை பெற்று கொள்முதல் செய்து விற்பனை கொள்ளலாம்.
இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்களில் ஒன்றாக பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றன. இதில் 15 வயதுக்கு மேற்பட்டோருக்கும், 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் ஊசியும் செலுத்தப்படுகிறது.
அந்தவகையில் புனே சீரம் நிறுவனத்தின் தயாரிப்பான கோவிஷீல்டு மற்றும் ஹைதராபாத் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசிகள் இந்தியாவில் பயன்பாட்டில் உள்ளன. ஜனவரி 26 ஆம் தேதி நிலவரப்படி 164 கோடி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

தடுப்பூசிகள் கொள்முதல்
இந்த தடுப்பூசிகளை தற்போது அரசே நேரடியாக கொள்முதல் செய்து இலவசமாக பொதுமக்களுக்கு செலுத்தி வருகிறது. இதில் கோவாக்சின் தடுப்பு மருந்து ஒரு டோஸ் 1,200 ரூபாய்க்கும், கோவிஷீல்டு தடுப்பு மருந்து ஒரு டோஸ் 750 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

நேரடியாக விற்பனை செய்ய அனுமதி
இந்நிலையில், சீரம் நிறுவனமும் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனனும் தங்களது தடுப்பூசி மருந்துகளை வெளிச் சந்தையில் விற்பனை செய்ய அனுமதி கேட்டு மத்திய அரசிடம் விண்ணப்பித்திருந்தது. மேலும் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் மருந்து குறித்த பரிசோதனை தரவுகளும் சமர்ப்பிக்கப்பட்டன. அவற்றை ஆராய்ந்த வல்லுநர் குழு, கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு மருந்துகளை வெளிச்சந்தையில் விற்பனை செய்ய அனுமதிக்கலாம் என பரிந்துரை செய்தது.

நிபந்தனைகள் விதிப்பு
இதனையடுத்து, புதிய மருந்துகள் மற்றும் மருத்துவ பரிசோதனை விதிகளின் கீழ் இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்திருக்கிறது. சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு வயது வந்தோருக்கு மட்டுமே தடுப்பூசிகளை பயன்படுத்த அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இனி மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகள் நேரடியாக கொரோனா தடுப்பூசிகளை பெற்று கொள்முதல் செய்து விற்பனை கொள்ளலாம். அதே நேரத்தில் மருந்து கடைகளில் விற்பனை செய்யப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவின் இணையதளத்தில் பதிவு
மருத்துவமனை மற்றும் கிளினிக்குகள் தங்கள் கொள்முதல்,விற்பனை செய்துள்ள தடுப்பூசி விவரங்களை மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு மையத்திடம் 6 மாதத்திற்கு ஒரு முறை அறிக்கையாக தாக்கல் செய்து கொள்ள வேண்டும். மேலும் தடுப்பூசி கொள்முதல்,விற்பனை தகவல்களை கோவின் இணையதளத்தில் பதிவிட்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பக்கவிளைவுகள்
அதோடு இரண்டு நிறுவனங்களும், தற்போது செய்து கொண்டிருக்கும் மருத்துவ பரிசோதனைகள் தொடர்பான தரவைச் சமர்ப்பிக்க வேண்டும் எனவும், தடுப்பூசி செலுத்தியபின் ஏற்படும் பக்கவிளைவுகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications