கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை வெளி சந்தைகளில் விற்க மத்திய அரசு அனுமதி...நிபந்தனைகள் விதிப்பு
இந்தியாவில் பொதுமக்களுக்கு செலுத்தப்படும் கொரோனா தடுப்பூசிகளான கோவிஷீல்டு, கோவாக்சினை சந்தையில் விற்க நிபந்தனைகளுடன் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
டெல்லி: கொரோனா தடுப்பூசிகளான கோவிஷீல்டு, கோவாக்சினை சந்தையில் விற்க நிபந்தனைகளுடன் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் இனி மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகள் நேரடியாக கொரோனா தடுப்பூசிகளை பெற்று கொள்முதல் செய்து விற்பனை கொள்ளலாம்.
இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்களில் ஒன்றாக பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றன. இதில் 15 வயதுக்கு மேற்பட்டோருக்கும், 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் ஊசியும் செலுத்தப்படுகிறது.
அந்தவகையில் புனே சீரம் நிறுவனத்தின் தயாரிப்பான கோவிஷீல்டு மற்றும் ஹைதராபாத் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசிகள் இந்தியாவில் பயன்பாட்டில் உள்ளன. ஜனவரி 26 ஆம் தேதி நிலவரப்படி 164 கோடி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

தடுப்பூசிகள் கொள்முதல்
இந்த தடுப்பூசிகளை தற்போது அரசே நேரடியாக கொள்முதல் செய்து இலவசமாக பொதுமக்களுக்கு செலுத்தி வருகிறது. இதில் கோவாக்சின் தடுப்பு மருந்து ஒரு டோஸ் 1,200 ரூபாய்க்கும், கோவிஷீல்டு தடுப்பு மருந்து ஒரு டோஸ் 750 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

நேரடியாக விற்பனை செய்ய அனுமதி
இந்நிலையில், சீரம் நிறுவனமும் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனனும் தங்களது தடுப்பூசி மருந்துகளை வெளிச் சந்தையில் விற்பனை செய்ய அனுமதி கேட்டு மத்திய அரசிடம் விண்ணப்பித்திருந்தது. மேலும் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் மருந்து குறித்த பரிசோதனை தரவுகளும் சமர்ப்பிக்கப்பட்டன. அவற்றை ஆராய்ந்த வல்லுநர் குழு, கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு மருந்துகளை வெளிச்சந்தையில் விற்பனை செய்ய அனுமதிக்கலாம் என பரிந்துரை செய்தது.

நிபந்தனைகள் விதிப்பு
இதனையடுத்து, புதிய மருந்துகள் மற்றும் மருத்துவ பரிசோதனை விதிகளின் கீழ் இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்திருக்கிறது. சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு வயது வந்தோருக்கு மட்டுமே தடுப்பூசிகளை பயன்படுத்த அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இனி மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகள் நேரடியாக கொரோனா தடுப்பூசிகளை பெற்று கொள்முதல் செய்து விற்பனை கொள்ளலாம். அதே நேரத்தில் மருந்து கடைகளில் விற்பனை செய்யப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவின் இணையதளத்தில் பதிவு
மருத்துவமனை மற்றும் கிளினிக்குகள் தங்கள் கொள்முதல்,விற்பனை செய்துள்ள தடுப்பூசி விவரங்களை மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு மையத்திடம் 6 மாதத்திற்கு ஒரு முறை அறிக்கையாக தாக்கல் செய்து கொள்ள வேண்டும். மேலும் தடுப்பூசி கொள்முதல்,விற்பனை தகவல்களை கோவின் இணையதளத்தில் பதிவிட்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பக்கவிளைவுகள்
அதோடு இரண்டு நிறுவனங்களும், தற்போது செய்து கொண்டிருக்கும் மருத்துவ பரிசோதனைகள் தொடர்பான தரவைச் சமர்ப்பிக்க வேண்டும் எனவும், தடுப்பூசி செலுத்தியபின் ஏற்படும் பக்கவிளைவுகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கிறது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications