25 கி.மீ தூரத்தில்தான் ரோடு.. காட்டுக்குள் கிராமம்.. அங்கேயும் கொரோனா.. தடுப்பூசிதான் ஒரே வழி மக்களே
டெல்லி: வனப் பகுதிக்குள் உள்ள காட்டுக்குள்ளும் கொரோனா பரவுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கரின் நக்சல் ஆதிக்கம் கொண்ட சுக்மா மாவட்டத்தில் உள்ளது கர்மா கோண்டி என்ற கிராமம். அருகிலுள்ள நெடுஞ்சாலையிலிருந்து 25 கி.மீ தூரம் பிடிக்கும். அடர்ந்த வனப் பகுதி சூழ்ந்துள்ள பகுதி இது. ஆனால் கடந்த வாரத்தில், இந்த கிராமத்தில் சோதனை செய்யப்பட்ட மூன்று பேரில் ஒருவருக்கு, அதாவது 239 பேரில் 91 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.

நோயாளிகள் கோவிட் பராமரிப்பு மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். கிராமமே ஒரு கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்மா கோண்டி கிராமத்திற்குள், பிபிஇ கிட்கள் அணிந்தபடி சுகாதாரப் பணியாளர்கள் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கிறார்கள். கிராமத்தில் முதல் கேஸ், மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஒரு கர்ப்பிணி பெண். அவர் மூலமாக பிறருக்கு பரவியுள்ளது.
தகவல் அறிந்து கொரோனா பரிசோதனை குழு மே 19ம் தேதி அன்று, கிராமத்தை அடைந்தது. முதல் நாளில் 41 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிறகு நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்தது என்கிறார்கள் மருத்துவ குழுவினர்.
"அவர்கள் அனைவருக்கும் காய்ச்சல் இருந்தது. நாங்கள் வீடு வீடாக கண்காணிப்பு நடத்தினோம், அறிகுறிகள் உள்ளவர்களை முதலில் சோதித்தோம். " என்கிறார்கள் மருத்துவ குழுவினர். கிராமங்களில் கூட கொரோனா பரவியுள்ள இந்த சூழ்நிலையில், தடுப்பூசி போட்டுக் கொள்வதுதான் சரியான வழியாக இருக்கும். பரவாது என்ற எண்ணத்தில் மெத்தனமாக இருக்க வேண்டாம் என்கிறார்கள் மருத்துவ குழுவினர்.












Click it and Unblock the Notifications