இன்னும் பலர் சிக்கி உள்ளனர்.. 3வது மாடியில் நடந்தது என்ன? டெல்லி தீ விபத்து.. போலீஸ் பரபர தகவல்
டெல்லி: டெல்லி வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் இன்னும் பலர் கட்டிடத்திற்கு உள்ளே சிக்கி இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
டெல்லியில் இருக்கும் முன்ட்கா மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அருகில் இருக்கும் வணிக வளாகத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. டெல்லி வணிக வளாக தீ விபத்தில் பலி எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.
டெல்லியில் ஏற்பட்ட பெரிய தீ விபத்தில் இதுவும் ஒன்று என தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

என்ன நடந்தது?
தீ விபத்து குறித்த தகவல் மாலை 4.40 மணிக்கு தீயணைப்பு துறைக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து 5 தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை பல மணி நேர போராட்டத்திற்கு பின் அணைத்தனர். இதுவரை 60 பேர் வரை காயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளனர். தீவிர தீக்காயங்களுடன் 40 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு மாடிகள்
முதல் இரண்டு மாடியில் சிக்கி இருந்தவர்கள் எல்லோரும் மீட்கப்பட்டுவிட்டனர். தற்போது மூன்றாவது மாடியில் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. மூன்றாவது மாடியில் சிக்கி இருக்கும் நபர்களை மீட்பதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ராட்சச கிரேன்கள் மூலம் உள்ளே இருப்பவர்களை மீட்டு வருகின்றன.

மூன்றாவது மாடி
ஆனாலும் உள்ளே இடிபாடுகள் மோசமாக இருப்பதால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தீ விபத்தின் போது 3வது மாடியில் கடுமையான புகை மண்டலம் சூழ்ந்தது. 12 மணி நேரத்திற்கும் மேலாக இவர்கள் உள்ளேயே இருந்துள்ளனர். இதனால் அவர்களுக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டு இருக்க வாய்ப்புகள் உள்ளன. இங்குதான் தீயின் வீரியம் அதிகம் இருந்தது.

பலி எண்ணிக்கை
இதன் காரணமாகவே மூன்றாவது மாடியில் இருந்தவர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் பலி எண்ணிக்கையும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது டெல்லி போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர். தீ விபத்திற்கு என்ன காரணம் என்று விசாரித்து வருகின்றனர். மின்கசிவா அல்லது வேறு காரணங்கள் இதற்கு இருக்கலாமா என்று விசாரிக்கப்பட்டு வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications