"இந்தியாவில் இன்று அறிமுகமாகிறது டிஜிட்டல் கரன்சி".. 9 வங்கிகளில் வெளியீடு.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு
டெல்லி: இந்தியாவில் சோதனை அடிப்படையில் இன்று டிஜிட்டல் கரன்சியை அறிமுகம் செய்வதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த டிஜிட்டல் கரன்சியை ஸ்டேட் பங்க் உள்பட 9 வங்கிகள் இன்று வெளியிட இருக்கின்றன.
இந்தியாவில் தற்போது புழக்கத்தில் நாணயங்களாகவும் காகித வடிவத்திலும் பணம் உள்ளது.
தற்போது மாறிவரும் நவீன யுகத்திற்கு ஏற்றபடி கிரிப்டோ கரன்சிகளின் பயன்பாடுகளும் உலக அளவில் அதிகரித்து வருகிறது.

சோதனை அடிப்படையில் அறிமுகம்
மெய்நிகர் நாணயம் என்று சொல்லப்படும் இத்தகைய கிரிப்டோ கரன்சிகள் பயன்பாடு இன்றைய தலைமுறையினர் மத்தியில் வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் டிஜிட்டல் பணம் அறிமுகம் செய்யப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து இருந்தார். அந்த வகையில், இன்று சோதனை அடிப்படையில் டிஜிட்டல் கரன்சியை இந்தியாவில் மத்திய அரசு இன்று அறிமுகம் செய்கிறது.

ரிசர்வ் வங்கி அறிவிப்பு
அரசின் பங்கு பத்திரங்களில் பரிமாற்றம் செய்ய இந்த டிஜிட்டல் கரன்சியை பயன்படுத்தலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. சோதனை அடிப்படையில் அறிமும் செய்யப்படுவதால் இதன் சக்சஸை வைத்து பிற பரிமாற்றங்களுக்கு டிஜிட்டல் கரன்சி பயன்படுத்த அனுமதி அளிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

9 வங்கிகள் வெளியிடுகின்றன
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா, ஹெச்.டி.எப்.சி, ஐசிஐசிஐ, கோட்டக் மகிந்திரா, யெஸ்பேங்க், ஐடிஎப்சி பர்ஸ்ட் வங்கி, ஹெச்.எஸ்.பி.சி உள்ளிட்ட 9 வங்கிகள் டிஜிட்டல் கரன்சியை இன்று வெளியிட உள்ளன. டிஜிட்டல் நாணயத்தின் சில்லரை பயன்பாடும் ஒரு மாதத்தில் கொண்டு வரப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

பண பரிமாற்றத்திற்கு எளிதாக..
குறிப்பிட்ட நகரங்களில் அறிமுகம் ஆகும் இந்த கரன்சியை வாடிக்கையாளர்களும், வியாபாரிகளும் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கூறுகையில், "பண பரிமாற்றத்திற்கு எளிதாகவும்.. வேகமாகவும்.. டிஜிட்டல் நாணயம் இருக்கும். தற்போது வங்கியில் நாம் ரூபாய் நோட்டுக்களை இருப்பு வைத்திருப்பது போலவே டிஜிட்டல் நாணயங்களையும் இருப்பு வைத்துக்கொள்ள முடியும்" என்று தெரிவித்தனர்.

மதிப்பு கூடவோ குறையவோ செய்யாது
டிஜிட்டல் நாணயங்கள் பெரிதாக வேறுபட்ட ஒன்று அல்ல எனவும் டிஜிட்டல் வடிவில் மட்டுமே என்று தெரிவித்துள்ள ரிசர்வ் வங்கி அதிகாரிகள், கிரிப்டோ கரன்சிகளை மதிப்பு கூடவோ குறையவோ செய்யாது என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications