நிருபர்களிடம் 'சோர்ஸ்' கேட்க முடியாது ஓகே.. ஆனால் பொறுப்போடு செயல்படுங்கள்.. டெல்லி ஹைகோர்ட் அட்வைஸ்
டெல்லி: பரபரப்புக்காக தனியுரிமையை மீறாதீர்கள் என செய்தி ஊடகங்களை டெல்லி ஹைகோர்ட் கேட்டுக்கொண்டுள்ளது.
ஸ்வீடன் நாட்டு சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க் பகிர்ந்த டுவிட்டர் டூல்கிட் தொடர்பாக பெங்களூரைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவி டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், திஷா ரவி மற்றும் கிரெட்டா இடையேயான வாட்ஸ்அப் உரையாடல் என்று கூறி, சில செய்தி சேனல்கள் தகவல்களை ஒளிபரப்பின.
இதை எதிர்த்து டெல்லி ஹைகோர்ட்டில் திஷா ரவி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 ஆங்கில செய்தி சேனல்களுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி பிரதீபா சிங் தலைமையிலான அமர்வு கூறியதாவது:
"ஒரு பத்திரிகையாளரை அவர்களின் செய்தி ஆதாரத்தை (Source) என்ன என்பதை வெளிப்படுத்தக் கேட்க முடியாது. ஆனாலும், அவர்கள் வெளியிடும் செய்தி உண்மையானதாக இருக்க வேண்டும். திஷா ரவி வாட்ஸ்அப் உரையாடலை டெல்லி காவல்துறை கசிய விட்டதாக மனுதாரர் கூறியபோதிலும், காவல்துறை அதை மறுக்கிறது. ஊடகங்களோ காவல்துறை வட்டார தகவல்களை வெளியிட்டதாக செய்தி ஒளிபரப்பியுள்ளன.
நடந்துகொண்டிருக்கும் விசாரணையைப் பற்றி அரைகுறையான செய்திகள் மற்றும் ஊக தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.
ஒருவரின் தனியுரிமைக்கான உரிமை, நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு மற்றும் பேச்சு சுதந்திரம் ஆகியவை சீரானதாக இருக்க வேண்டும். ஆனால் இந்த விஷயத்தில் மீடியா கவரேஜ் நிச்சயமாக பரபரப்பை அடிப்படை நோக்கமாக கொண்டு இருக்கிறது.
சரிபார்க்கப்பட்ட செய்திகளை மட்டுமே ஒளிபரப்பு செய்ய சேனல் எடிட்டர்கள் முன்வர வேண்டும். நிருபர்கள் மீது எடிட்டோரியல் குழு, இந்த விஷயத்தில் கட்டுப்பாடு வைத்திருக்க வேண்டும்.
ஏற்கனவே ஆன்லைனில் வெளியாகியுள்ள வாட்ஸ்அப் உரையாடல் தகவலை அகற்றுவதற்கான கோரிக்கை பின்னர் பரிசீலிக்கப்படும். இவ்வாறு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications