வேகமாக ஏடிஎம் விரைந்த லட்சுமி விலாஸ் வாடிக்கையாளர்கள்.. பதற்றம் அடைய வேண்டாம்.. ஆர்பிஐ அறிவுரை!
டெல்லி: லட்சுமி விலாஸ் வங்கியில் கணக்கு வைத்து இருக்கும் மக்கள் யாரும் பதற்றம் அடைய வேண்டாம், உங்களின் பணம் பாதுகாப்பாக உள்ளது என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
தமிழகத்தை சேர்ந்த லட்சுமி விலாஸ் வங்கிக்கு மத்திய நிதி அமைச்சகம் moratorium கட்டுப்பாட்டை விதித்துள்ளது. இதன் காரணமாக இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் டிசம்பர் 16ம் தேதி வரை மொத்தமாக 25 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க முடியும்.
வங்கியின் நிர்வாக குழுவின் நிலவிய பிரச்சனைகள், வாராகடன், மோசமான நிதி மேலாண்மை என்ற பல காரணங்களால் லட்சுமி விலாஸ் வங்கிக்கு இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

மோசம்
ரிசர்வ் வங்கி மற்றும் செபியின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு இந்த வங்கி செயல்பட்டு வந்தது. வங்கியில் நிலவி வரும் குளறுபடிகளை ஆர்பிஐ தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தது. இந்த நிலையில் தற்போது வங்கியில் இருந்து 25 ஆயிரத்திற்கும் அதிகமாக பணம் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தமிழகத்தை சேர்ந்த வங்கி என்பதால், இதில் தமிழர்கள் பலர் கணக்கு வைத்துள்ளனர்.

வேகம்
இதையடுத்து லட்சுமி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்கள் வேகமாக பணம் எடுக்க ஏடிஎம் விரைந்துள்ளனர். 25 ஆயிரம்தான் எடுக்க முடியும். அதையாவது இப்போதே எடுத்து வைத்துக் கொள்வோம். கூடுதல் கட்டுப்பாடுகள் வந்தால் இன்னும் சிக்கலாகும் என்று வேகமாக ஏடிஎம் விரைந்துள்ளனர்.

அச்சம்
தாங்கள் சேர்த்து வைத்து இருந்த பணம் எங்கே வீணாகிவிடுமோ என்று பலர் அச்சம் அடைந்துள்ளனர். கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால் இருக்கிற பணத்தையும் எடுக்க முடியாமல் போய்விடும் என்று இவர்கள் பதற்றம் அடைந்து உள்ளனர். இந்த நிலையில் லட்சுமி விலாஸ் வாடிக்கையாளர்கள் யாரும் பதற்றம் அடைய வேண்டாம் என்று ஆர்பிஐ அமைப்பு தெரிவித்துள்ளது.

அச்சம் வேண்டாம்
உங்கள் பணம் பாதுகாப்பாக உள்ளது. உங்களின் நலன் கருதியே இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. யாரும் அச்சப்பட வேண்டாம். இந்த கட்டுப்பாடுகள் வங்கி மற்றும் வாடிக்கையாளர் நலனுக்காக மட்டுமே செய்யப்பட்டுள்ளது, என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது. இன்னும் ஒரு மாதத்திற்கு இந்த கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் என்பதால் லட்சுமி விலாஸ் வாடிக்கையாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications