வேகமாக ஏடிஎம் விரைந்த லட்சுமி விலாஸ் வாடிக்கையாளர்கள்.. பதற்றம் அடைய வேண்டாம்.. ஆர்பிஐ அறிவுரை!
டெல்லி: லட்சுமி விலாஸ் வங்கியில் கணக்கு வைத்து இருக்கும் மக்கள் யாரும் பதற்றம் அடைய வேண்டாம், உங்களின் பணம் பாதுகாப்பாக உள்ளது என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
தமிழகத்தை சேர்ந்த லட்சுமி விலாஸ் வங்கிக்கு மத்திய நிதி அமைச்சகம் moratorium கட்டுப்பாட்டை விதித்துள்ளது. இதன் காரணமாக இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் டிசம்பர் 16ம் தேதி வரை மொத்தமாக 25 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க முடியும்.
வங்கியின் நிர்வாக குழுவின் நிலவிய பிரச்சனைகள், வாராகடன், மோசமான நிதி மேலாண்மை என்ற பல காரணங்களால் லட்சுமி விலாஸ் வங்கிக்கு இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

மோசம்
ரிசர்வ் வங்கி மற்றும் செபியின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு இந்த வங்கி செயல்பட்டு வந்தது. வங்கியில் நிலவி வரும் குளறுபடிகளை ஆர்பிஐ தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தது. இந்த நிலையில் தற்போது வங்கியில் இருந்து 25 ஆயிரத்திற்கும் அதிகமாக பணம் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தமிழகத்தை சேர்ந்த வங்கி என்பதால், இதில் தமிழர்கள் பலர் கணக்கு வைத்துள்ளனர்.

வேகம்
இதையடுத்து லட்சுமி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்கள் வேகமாக பணம் எடுக்க ஏடிஎம் விரைந்துள்ளனர். 25 ஆயிரம்தான் எடுக்க முடியும். அதையாவது இப்போதே எடுத்து வைத்துக் கொள்வோம். கூடுதல் கட்டுப்பாடுகள் வந்தால் இன்னும் சிக்கலாகும் என்று வேகமாக ஏடிஎம் விரைந்துள்ளனர்.

அச்சம்
தாங்கள் சேர்த்து வைத்து இருந்த பணம் எங்கே வீணாகிவிடுமோ என்று பலர் அச்சம் அடைந்துள்ளனர். கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால் இருக்கிற பணத்தையும் எடுக்க முடியாமல் போய்விடும் என்று இவர்கள் பதற்றம் அடைந்து உள்ளனர். இந்த நிலையில் லட்சுமி விலாஸ் வாடிக்கையாளர்கள் யாரும் பதற்றம் அடைய வேண்டாம் என்று ஆர்பிஐ அமைப்பு தெரிவித்துள்ளது.

அச்சம் வேண்டாம்
உங்கள் பணம் பாதுகாப்பாக உள்ளது. உங்களின் நலன் கருதியே இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. யாரும் அச்சப்பட வேண்டாம். இந்த கட்டுப்பாடுகள் வங்கி மற்றும் வாடிக்கையாளர் நலனுக்காக மட்டுமே செய்யப்பட்டுள்ளது, என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது. இன்னும் ஒரு மாதத்திற்கு இந்த கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் என்பதால் லட்சுமி விலாஸ் வாடிக்கையாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications