தண்ணீ தொட்டி தேடி வந்த கண்ணுக்குட்டி நான்.. மதுக்கடையில் என்ன நடக்குத்துன்னு பாருங்க!
டெல்லி: அனைத்து வகை மதுபானங்கள் விலையும் 70 சதவீதம் உயர்த்தப்பட்ட போதிலும் டெல்லியின் சந்தர் நகரில் திறக்கப்பட்ட மதுக்கடை முன்பு இரண்டாவது நாளாக மதுபானங்கள் வாங்க ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.
Recommended Video
கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவில் மும்பைக்கு அடுத்தபடியாக மோசமாக பாதிக்கப்பட்ட நகரம் என்றால் அது டெல்லி. இந்தியாவின் தலைநகரான டெல்லி வெறும் நகரம் என்பது மட்டுமல்லாமல் ஒரு குட்டி மாநிலமாக உள்ளது. ஆனால் அதேநேரம் மக்கள் அடர்த்தி என்பது இந்தியாவின் வேறு எங்கும் இல்லாத அளவு ஆகும். கோடிக்கணக்கான மக்கள் டெல்லியில் வசிக்கிறார்கள்.

இந்நிலையில் கொரோனா பிரச்சனை காரணமாக மார்ச 25ம்தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் சுமார் 40 நாட்களுக்கு பிறகு டெல்லியில் நேற்று முதல் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
இதனால் உற்சாகம் அடைந்த மதுப்பிரியர்கள் எப்படியாவது மது வாங்கிவிட வேண்டும் என்று நீண்ட வரிசையில் காத்திருந்து மது வாங்கி சென்றனர். சமூக இடைவெளியை பற்றி குடிமகன்கள் சுத்தமாக கவலைப்படவில்லை, எப்படியாவது மது வாங்கிட வேண்டும் என்ற வேகம் மட்டுமே அவர்களிடம் இருந்தது.
இந்நிலையில் டெல்லி அரசு அனைத்து வகை மதுபானங்கள் விலையையும் 70 சதவீதம் உயர்த்தி உள்ளது.ஆனால் மதுபானங்களின் விலை உயர்வை பற்றி சிறிதும் கவலைப்படாத குடிமகன்கள் டெல்லியின் சந்தர் நகரில் திறக்கப்பட்ட மதுக்கடை முன்பு மது வாங்க ஆயிரக்கணக்கில் திரண்டனர்.
எப்படியும் மது வாங்கிவிட வேண்டும் என்று ஒருவரை ஒருவர் முண்டியடித்தபடி சென்ற காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மதுவால் இத்தனை நாட்களாக கடைபிடித்து வந்த சமூக இடைவெளி காணாமல் போய் உள்ளது.
Justin : Hum Na manengee!!! This is despite the hike of 70 percent in the cost of all kinds of liquor. Second day of opened liquor store in Chandar Nagar in #Delhi. #Lockdown3 pic.twitter.com/BLa5MSQsi6
— alok singh (@AlokReporter) May 5, 2020
ஒருவேளை கொரோனா அதிகரித்தால் அதற்கு மதுக்கடைகள் முக்கிய காரணமாக இருக்கும் என்பதற்கு கீழ்க்கண்ட வீடியோ காட்சிகளே சாட்சி. இது வெறும் டெல்லிக்கு மட்டுமல்ல.. மொத்த இந்தியாவுக்கும் பொருந்தும். மதுக்கடைகள் இல்லாமல் 40 நாட்களுக்கு மேல் மக்களால் இருக்க முடிந்தது. ஆனால் மது வருமானம் இல்லாமல் பல மாநில அரசுகளால் இயங்க முடியவில்லை என்ற கசப்பான உண்மையை இந்த காட்சிகள் எடுத்துக்காட்டுக்கின்றன.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications