குஜராத் நிறுவனம்- ரூ 14,500 கோடி வங்கி கடன் மோசடி- காங். அகமதுபடேலிடம் 8 மணிநேரம் தொடர் விசாரணை
டெல்லி: ரூ14,500 கோடி வங்கி கடன் மோசடி தொடர்பாக காங்கிரஸ் கட்சி பொருளாளரான அகமது படேலிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் 8 மணிநேரம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.
குஜராத்தின் வதோதராவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனம் ஸ்டெர்லிங் பயோடெக். இந்த நிறுவனம் வங்கிகளில் இதுவரை ரூ14,000 கோடி கடன் பெற்றுள்ளது.
ஆனால் வங்கி கடன்களை ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனம் திருப்பி செலுத்தவில்லை என்பது புகார். இந்த நிறுவனத்தை நடத்தி வந்த நிதின் சந்தேசரா, சேத்தன் சந்தேசரா, தீப்தி சந்தேசரா மூவரும் தற்போது நைஜீரியாவுக்கு தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டனர். அவர்களை நாடு கடத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தலைவர்களின் தொடர்பு அம்பலம்
இதனிடையே ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவன ஊழியர்களிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். தற்போது தலைமறைவாக உள்ள சேத்தன் சந்தேசராவுக்கு மிக நெருக்கமான சுனில் யாதவிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. தலைமறைவாக உள்ள சந்தேசரா சகோதரர்களுக்கும் பல அரசியல் கட்சித் தலைவர்களின் வாரிசுகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததும் அம்பலமானது.

விசாரணையில் அகமது படேல் குடும்பம்
குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக உள்ள அகமது படேலின் மகன் பைசல், மருமகன் இர்பான் சித்திக் ஆகியோர் அமலாக்கப் பிரிவு அதிகாரிகளின் விசாரணை வளையத்தில் சிக்கினர். இதனால் அவர்களிடம் கடந்த ஆண்டு அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி இருந்தனர். இது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

சோனியா, ராகுல் ஆலோசகர்
இந்த நிலையில் ஸ்டெர்லிங் பயோடெக் வழக்கில் அகமது படேலையும் விசாரிக்க அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் முடிவு செய்தனர். காங்கிரஸ் கட்சியின் தலைவர்களான சோனியா, ராகுல் காந்தியின் பிரதான ஆலோசகர் அகமது படேல்தான். இதனால் அகமது படேலை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரிக்க முடிவு செய்தது அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்காக அகமது படேலுக்கு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது.

8 மணிநேர கிடுக்குப் பிடி விசாரணை
ஆனால் கொரோனா பரவல் அதிகரித்திருப்பதால் தம்மால் விசாரணைக்கு வர இயலாது என அகமது படேல் மறுத்துவந்தார். இதனால் நேற்று டெல்லியில் உள்ள அகமது படேலின் வீட்டுக்கே சென்று அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை சுமார் 8 மணிநேரம் நடைபெற்றது. அப்போது அகமது படேல் தெரிவித்த பதில்கள் அனைத்தும் வாக்குமூலங்களாகப் பதிவு செய்யப்பட்டன.

வந்தது மோடியின் நண்பர்கள்
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கருத்து கூறிய அகமது படேல், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரது நண்பர்கள் என்னிடம் விசாரணை நடத்த வந்தனர். அவர்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் நான் பதில் அளித்துவிட்டேன். எல்லையில் சீனா நமது நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் போது அதை திசை திருப்ப அரசு அதிகாரிகளை மத்திய அரசு இப்படி தவறாக பயன்படுத்துவது வருத்தம் தருகிறது என்றார். அகமது படேலிடம் வரும் செவ்வாய்க்கிழமையன்று மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது.
-
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது?












Click it and Unblock the Notifications