பண வீக்கத்தை கட்டுப்படுத்தும் பாஜக அரசு.. தொடர்ந்து விலை குறையும் உணவுப்பொருட்கள்!
டெல்லி: உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்து குறியானது வருவது மக்களுக்கு நிறைய பலன்களை ஏற்படுத்தி இருக்கிறது. அதேபோல் இது பண வீக்கத்தையும் பெரிய அளவில் கட்டுப்படுத்தி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதிக விவசாயம் மற்றும் அதிக மகசூல் இரண்டும் உணவு பொருட்களின் விலையை குறைத்தாலும் அதுவும் இரண்டு பக்க கத்திதான். இதன் காரணமாக அதிக உணவுப் பொருட்களின் விலை குறைவதால் பொருட்களை விற்கும் விவசாயிகளின் இழப்பை அரசுதான் சரிக்கட்ட வேண்டி இருக்கும்.

இதற்காகத்தான் பிரதமர் மோடி அரசு எம்எஸ்பி பாலிசி எனப்படும் குறைந்தபட்ச விலை நிர்ணய கொள்கையை உருவாக்கி உள்ளது. இதன் மூலம் விவசாயிகளின் வருவாயை 2022 அதிகப்படுத்துவதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.
பட்ஜெட் பிரச்சனை ஒருபக்கம் இருந்தாலும் பணவீக்கம் கட்டுப்பட்தில் இருப்பது மக்களுக்கு பலன்தான். நெல், பால், எண்ணெய் பொருட்கள் ஆகியவைகளின் பண வீக்க சதவிகிதம் குறைந்ததுள்ளது. அதே சமயம் கோதுமை, சோளம், உருளைகிழங்கு ஆகியவைகளின் பணவீக்கம் 8.87% 5.54% and 80.13% என்று அதிகம் ஆகியுள்ளது. அதே சமயம் முட்டை, இறைச்சியின் பண வீக்கம் குறைந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு முக்கிய காரணம் பாஜக ஆட்சியின் கொள்கை முடிவுகள் என்றும் கூறலாம்.
இதற்கு சர்வதேச கச்சா எண்ணெய் விலையும் ஒரு காரணம் ஆகும். கச்சா எண்ணெய் விலையின் மாற்றத்தை பொறுத்து பணவீக்கத்திலும் மாற்றம் ஏற்படும். இப்போது கச்சா எண்ணெய் தொடர்ந்து குறைந்து வருவது பண வீக்கத்தை இந்தியாவில் பெரிய அளவில் கட்டுப்படுத்தி இருக்கிறது.
[ஜிஎஸ்டி வரி விதிப்பால் ரெஸ்டாரண்டுகளில் குறைந்த உணவு விலை! வாடிக்கையாளர்கள் குஷி]
சரியாக சொல்ல வேண்டும் என்றால் பண வீக்க என்பது விலைவாசியை கட்டுப்படுத்த கொடியது. பண வீக்கம் சரியாக இருந்தால், அரசு விலைவாசியை சரியாக வைத்திருக்கிறது என்றும் கூறலாம். அந்த வகையில் பிரதமர் மோடி ஆட்சி விலைவாசியை சரியான கட்டுப்பாட்டில் வைத்துள்ளது என்றும் கூறலாம்.












Click it and Unblock the Notifications