டெல்லி விவசாய போராட்ட பகுதியில் கொல்லப்பட்ட இளைஞர்... யார் இந்த நிஹாங்ஸ் சீக்கியர்கள்? நடந்தது என்ன?
டெல்லி: டெல்லி விவசாய பகுதியில் 35 வயது இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நிஹாங்ஸ் சீக்கியர்கள் அமைப்பின் மீது இந்த கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடந்து வரும் நிலையில் டெல்லி சிங்கு எல்லை பகுதியில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது. இன்று அதிகாலை 5 மணிக்கு கால் மற்றும் கை மணிக்கட்டு வெட்டப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
தூக்கில் தொங்கிய நிலையில், உடல் முழுக்க சேதப்படுத்தப்பட்ட நிலையில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் நிஹாங்ஸ் சீக்கியர்கள் இந்த கொலையை செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

யார்?
இதில் கொலை செய்யப்பட்டவரின் பெயர் லக்பீர் சிங். இவர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர். டெல்லியில் விவசாய போராட்டம் நடக்கும் சிங்கு எல்லை பகுதிக்கு அருகே ஹரியானா சோனிபட் மாவட்டத்தில் வசித்து வந்தார். இவர் கடந்த சில நாட்களாக நிஹாங்ஸ் சீக்கியர்களுடன் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இங்கு இருக்கும் நிஹாங்ஸ் கேம்ப் ஒன்றில் இவர் வசித்து வந்துள்ளார்.

மோதல்
இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணிக்கு லக்பீர் சிங் தூங்காமல் கையில் சீக்கியர்கள் புனிதமாக கருதும் நூலான சார்பாலோ கிரந்த்தை கையில் வைத்து இருந்ததாக கூறப்படுகிறது. சீக்கியர்கள் வணங்கும் குரு கோவிந்த் சிங் உள்ளிட்ட பலரின் கவிதைகள், இலக்கியங்கள் இடம்பெற்ற புனித நூல்களில் இதுவும் ஒன்றாகும். இதை இழிவுபடுத்தும் வகையில் லக்பீர் சிங் இன்று அதிகாலை செயல்பட்டதாக கூறப்படுகிறது. இதை நிஹாங்ஸ் சீக்கியர்கள் பார்த்துள்ளனர்.

தாக்குதல்
இதையடுத்தே லக்பீர் சிங்கை நிஹாங்ஸ் கொடுமையாக தாக்கி உள்ளனர். இவர் தாக்கப்படும் வீடியோக்கள் வெளியாகி உள்ளது. அதில் நிஹாங்ஸ் சீக்கியர்கள் அவரை கொடுமையான ஆயுதங்கள் மூலம் மாறி மாறி தாக்கி உள்ளனர். இடையில் லக்பீர் சிங்கின் இடம், பெயர் குறித்து கேள்விகளை எழுப்பி உள்ளனர். பின்னர் அவரின் கையில் இருந்து மணிக்கட்டை வெட்டி உள்ளனர். இந்த கொடூர சம்பவமும் வீடியோவாக பதிவாகி உள்ளது.

அவமதிப்பு
சார்பாலோ கிரந்த் புனித நூலை அவமதித்த காரணத்தால் இந்த கொலை நடந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. சம்யுக்தா கிஷான் மோர்ச்சா விவசாய அமைப்பு தங்களுக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்று கூறியுள்ளது. அதோடு நிஹாங்ஸ் சீக்கியர்கள் கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாகவும் சம்யுக்தா கிஷான் மோர்ச்சா அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.

யார் நிஹாங்ஸ் சீக்கியர்கள்?
நிஹாங்ஸ் சீக்கியர்கள் என்பவர்கள் ஆயுதம் ஏந்திய சீக்கிய போராளி குழுவாகும். தங்களை நிஹாங்ஸ் சீக்கியர்கள் அல்லது அகாலி சீக்கியர்கள் என்று இவர்கள் அழைத்துக்கொள்வார்கள். அதாவது அழிவு இல்லாத போராளிகள். குரு ஹர்கோபிந்த் என்பவரால் இந்த பிரிவு தொடங்கப்பட்டது. தொடக்க காலத்தில் சீக்கியர்கள் நடத்திய பெரும்பான்மையான போர்களில் நிஹாங்ஸ் சீக்கியர்கள்தான் ஈடுபட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி












Click it and Unblock the Notifications