ஹிஜாப் விவகாரம்:மத்திய அரசின் நிலைப்பாடு என்ன? வராத பதில்.. லோக்சபாவில் திமுக, காங். வெளிநடப்பு
டெல்லி: ஹிஜாப் விவகாரம் குறித்து மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் என கோரி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சி எம்பிக்கள் மக்களவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
Recommended Video
கர்நாடகாவில் முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து கொண்டு கல்வி நிறுவனங்களுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. இதை எதிர்த்து கல்வி நிறுவனங்களின் வெளியே மாணவிகள் போராடி வருகிறார்கள்.
இவர்கள் ஹிஜாப்புடன் உள்ளே வர அனுமதி அளித்தால், நாங்கள் காவி துண்டுகளுடன் வருவோம் என இந்துத்துவா மாணவர்கள் சிலர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்தில் கல்வீச்சு சம்பவங்களும் நடைபெறுகின்றன.

தேசிய கொடி
இன்றைய தினம் உச்சகட்டமாக ஒரு கல்லூரியில் தேசிய கொடியை இறக்கிவிட்டு அதற்கு பதிலாக காவிக் கொடியை மாணவர் ஒருவர் ஏற்றியதால் பதற்றம் ஏற்பட்டது. இந்த பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் நாளை முதல் கர்நாடகாவில் உள்ள அனைத்து உயர்நிலை பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் 3 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் கூட்டத் தொடர்
இந்த நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் போது மக்களவையில் ஹிஜாப் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து வரும் மாணவிகள் தடுத்து நிறுத்தப்படும் அட்டூழியம் குறித்து மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என கேள்வி எழுப்பப்பட்டது.

மார்க்சிஸ்ட்
இதையடுத்து அவையில் சலசலப்பு ஏற்பட்டது. இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு விளக்கமளிக்க மறுத்ததாக கூறி காங்கிரஸ், திமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மதிமுக, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) ஆகிய கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

மரபுகள்
இதுகுறித்து காங்கிரஸ் கட்சி எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், ஹிஜாப் விவகாரம் குறித்து நாங்கள் கேள்வி எழுப்பினோம். நாட்டில் ஹிஜாப் அணிவது குற்றமில்லை. நாட்டில் உள்ள ஒவ்வொரு மதத்தினரும் தங்கள் கலாச்சாரம், பழக்கவழக்கங்கள், மரபுகளை தடையின்றி பின்பற்றுவதற்கு சுதந்திரம் உண்டு.

முஸ்லீம் சகோதரிகள்
ஆனால் தற்போது முஸ்லீம் சமூகத்தை சேர்ந்த சகோதரிகள் மீது சிலர் குறிவைத்து தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள். இதனால்தான் இந்த ஹிஜாப் விவகாரம் குறித்து மத்திய அரசின் நிலைப்பாட்டை கேட்டோம். ஆனால் எங்கள் கோரிக்கையை கேட்கவே இல்லை. அதனால் வெளிநடப்பு செய்துவிட்டோம் என்றார்.

சட்டம் ஒழுங்கு
முன்னதாக மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறுகையில் அனைத்து மாணவர்களும் பள்ளி, கல்லூரிகளால் பரிந்துரைக்கப்படும் உடை கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெடாமல் இருக்க வேண்டும். மாணவர்களை யார் தூண்டிவிடுகிறார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications