டிஜிட்டல் மீடியாக்களை ஒழுங்குப்படுத்த மசோதா.. நாடாளுமன்ற குளிர்கால தொடரில் நிறைவேற்ற வாய்ப்பு
டெல்லி: டிஜிட்டல் மீடியாக்களை ஒழுங்குப்படுத்தும் வகையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
டெல்லி நாடாளுமன்றத்தில் வரும் 18 ம் தேதி குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடருக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பயன்படுத்த கூடாத வார்த்தைகளின் பட்டியல் நேற்று வெளியாகி சர்ச்சையானது. இதன் தொடர்ச்சியாக நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம், போராட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் மீடியாக்களுக்கான மசோதா
இந்நிலையில் தான் இந்த கூட்டத்தொடரில் நாட்டில் டிஜிட்டல் மீடியாக்களை ஒழுங்குப்படுத்தும் நோக்கத்தில் மத்திய அரசு மசோதா கொண்டு வரலாம் என கூறப்படுகிறது. அதாவது டிஜிட்டல் மீடியாக்கள் ஏதேனும் விதிமீறலில் ஈடுபட்டால் ப்ரஸ் பதிவு மற்றும் பிரியாடிக்கல் மசோதாவின் கீழ் கீழ் நடவடிக்கை எடுக்கபடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. அதோடு இந்த மசோதா நிறைவேற்றப்படும் பட்சத்தில் செய்தித்தாள்கள் மற்றும் அச்சகங்களை ஒழுங்குபடுத்தும் பிரஸ் மற்றும் பதிவுக்கான புத்தக சட்டம் 1867ல் திருத்தம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

பதிவு கட்டாயமாகலாம்
இதன்மூலம் செய்திதாள்களை போல் டிஜிட்டல் மீடியாக்களையும் பிரஸ் மற்றும் பீரியடிகல்ஸ் மசோதாவின் கீழ் பதிவு செய்ய வேண்டிய சூழல் உருவாகும் எனவும், டிஜிட்டல் வெளியீட்டாளர்கள், பிரஸ் ரிஜிட்டார் ஜெனரலிடம் பதிவு செய்ய வேண்டியது அவசியமாகும் எனவும் கூறப்படுகிறது.
இருப்பினும் இந்த மசோதா பற்றி இன்னும் அமைச்சரவையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

காரணம் என்ன?
இந்தியாவில் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் சார்பில் செய்தித்தாள் அச்சிடுதல், வெளியிடுதல் உள்ளிட்டவற்றை ஒழுங்குப்படுத்தி, கண்காணித்து வருகிறது. இதில் ஏதேனும் விதிமீறல்கள் இருந்தால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மூலம் அமைச்சகம் நடவடிக்கை மேற்கொள்ளும். ஆனால் இந்தியாவில் டிஜிட்டல் மீடியாக்களை கட்டுப்படுத்த எந்த சட்ட நடைமுறையும் இல்லை. இதனால் தான் மத்திய அரசு புதிதாக இந்த மசோதவை கொண்டு வந்து டிஜிட்டல் மீடியாக்களையும் ஒழுங்குப்படுத்த முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

முன்பு நடந்தது என்ன?
முன்னதாக கடந்த 2019ம் ஆண்டில் மத்திய அரசு சார்பில் புதிய தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளின் கீழ் டிஜிட்டல் மீடியாக்களை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் தான் தற்போது புதிய ரூட்டில் மத்திய அரசு யோசிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications