3 நாட்களில் 2ஆவது முறையாக உயர்வு.. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 1,975 பேருக்கு கொரோனா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் கடந்த 3 நாட்களில் இரண்டாவது முறையாக கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை ஒரே நாளில் 1,975 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Recommended Video

    கொரோனாவுக்கு அடுத்து மோசமான ஆபத்து... இந்தியாவுக்கு ஐ.நா. எச்சரிக்கை

    சீனாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு கொரோனா பரவிய நிலையில் இந்தியாவில் கொரோனா பாதித்த முதல் நபர் கேரளாவில் கடந்த ஜனவரி 30 ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டார். இதையடுத்து அங்கும் இங்கும் ஒவ்வொன்றாக அதிகரித்து வந்தது.

    கொரோனா குறித்து மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்தன் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில் ஹாட்ஸ்பாட் மாவட்டங்களில் நிலைமை முன்னேற்றமடைந்துள்ளது. அவை கொரோனா அதிகம் பாதிக்காத மாவட்டங்களாக மாற தொடங்கியுள்ளன என்றார்.

    சிகிச்சை

    சிகிச்சை

    கொரோனா பாதிப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27,539 ஆக உயர்ந்துள்ளது. பலியானோரின் எண்ணிக்கை 875 ஆக அதிகரித்துள்ளது. அது போல் குணமடைந்தோரின் எண்ணிக்கை 5,913 ஆகும். தற்போது மருத்துவமனையில் 20,177 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    தொற்று

    தொற்று

    குணமடைந்தோரின் சதவீதம் 21.96 ஆக உள்ளது. கடந்த 10 நாட்களில் குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவதால் 12 சதவீதமாக இருந்த எண்ணிக்கை தற்போது 21.96 சதவீதமாகிவிட்டது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் முறையாக ஒரே நாளில் 1,752 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

    தொற்று

    தொற்று

    இதையடுத்து நேற்று ஒரே நாளில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,975 ஆனது. கடந்த 3 நாட்களில் இரண்டாவது முறையாக அதிகம் பேருக்கு பாதித்துள்ளது. வெள்ளிக்கிழமையை காட்டிலும் நேற்றைய தினம் கூடுதலாக 223 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சுகாதாரத் துறை

    சுகாதாரத் துறை

    மகாராஷ்டிராவில் மொத்தம் 7,628 பேருக்கும் குஜராத்தில் 3,071 பேருக்கும் , டெல்லியில் 2,625 பேருக்கும், ராஜஸ்தானில் 2,083 பேருக்கும் மத்திய பிரதேசத்தில் 2,096 பேருக்கும், உத்தரப் பிரதேசத்தில் 1,843 பேருக்கும், தமிழகத்தில் 1,885 பேருக்கும், ஆந்திரத்தில் 1,097 பேருக்கும், தெலுங்கானாவில் 991 பேருக்கும் என கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் எண்ணிக்கை அதிகரித்தது மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் கொரோனா வேகமாக பரவி வருவதே காரணமாகும் என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

    மேகாலயா

    மேகாலயா

    மொத்தம் இறந்தவர்களில் மகாராஷ்டிராவில் 323 பேரும், குஜராத்தில் 133 பேரும், மத்திய பிரதேசத்தில் 99 பேரும், டெல்லியில் 54 பேரும், ஆந்திரத்தில் 31 பேரும் ராஜஸ்தானில் 33 பேரும், தமிழகத்தில் 24 பேரும், பஞ்சாப்பில் 17 பேரும்,ஜம்மு காஷ்மீரில் 6 பேரும், கேரளாவில் 4 பேரும், ஜார்க்கண்ட், ஹரியானாவில் தலா 3 பேரும், பீகாரில் 2 பேரும், மேகாலயா, ஹிமாச்சல் பிரதேசம், ஒடிஸா, அஸ்ஸாமில் தலா ஒருவர் ஆவர்.

    3ஆவது முறை

    3ஆவது முறை

    வெளிநாடுகளில் மட்டுமே கொத்து கொத்தாக ஒரே நாளில் கொரோனா நோயாளிகள் உயர்ந்து வந்த நிலையில் தற்போது இந்தியாவிலும் அதே நிலை நீடித்துள்ளது. மேலும் இந்த ஊரடங்கை நீட்டிப்பதா, இல்லை தளர்வுகளை அளிப்பதா என்பது குறித்து மாநில முதல்வர்களுடன் இன்று மீண்டும் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்துகிறார். இன்று நடைபெறும் ஆலோசனை 3 ஆவது முறையாக நடத்தப்படுவதாகும். இதனிடையே பிளாஸ்மா சிகிச்சையால் 49 வயது ஆண் ஒருவர் கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்துள்ளது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+