"ஸ்லீப்பர் செல்கள்".. இந்தியாவில் அதிபயங்கர ரயில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டம்? பரபர தகவல்
டெல்லி: இந்தியாவில் உள்ள சில பகுதிகளில் பாகிஸ்தான் உளவு அமைப்பு தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக நாட்டின் உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
பாகிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பம் இப்போது தான் முடிவுக்கு வந்துள்ளது. அந்நாட்டின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் பதவி ஏற்றுக்கொண்டார்.

இதற்கிடையே காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சியும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. யாருக்கும் தெரியாமல் பாகிஸ்தான் பகுதியில் இருந்து பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் வர முயல்வதும் அதை இந்திய ராணுவம் முறியடிப்பதும் தொடர்கதையாகவே உள்ளது.
இந்தச் சூழலில் தான் நாட்டின் உளவு அமைப்புகள் முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதாவது பஞ்சாப் மற்றும் அதன் சுற்றுவட்டார மாநிலங்களில் உள்ள ரயில் பாதைகளைக் குறிவைத்து ஐஎஸ்ஐ எனப்படும் பாகிஸ்தானின் இன்டர் சர்வீசஸ் உளவுத்துறை பெரிய சதித் திட்டத்தை தீட்டியுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த பாதைகளில் செல்லும் சரக்கு ரயில்களைக் குறிவைத்துத் தகர்க்கும் வகையில் ஐஎஸ்ஐ அமைப்பு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவில் உள்ள ரயில் டிராக்குகளை குறி வைத்துத் தாக்குதல் நடத்த ஐஎஸ்ஐ அமைப்பு இந்தியாவில் உள்ள தனது ஏனெட்டுகளுக்கு நிதி உதவி அளித்து வருவதாகவும் உளவுத்துறை எச்சரித்துள்ளது.
அதாவது இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தானின் ஸ்லீப்பர் செல்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபட ஐஎஸ்ஐ அமைப்பு அதிகப்படியான தொகையைச் செலுத்தி வருவதாக அதில் கூறப்பட்டுள்ளது.
-
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
அசிங்கப்பட்ட பாகிஸ்தான்! முகத்திலேயே விழுந்த அடி.. கப்பலை கூட அனுமதிக்காத ஈரான்! இதெல்லாம் தேவை தானா -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்!












Click it and Unblock the Notifications