"டாப்" இந்திய தலைவர் குறி! தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு.. பரபர தகவல்
டெல்லி: மத்திய அரசின் டாப் தலைவர் ஒருவரைக் குறிவைத்து ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்தத் திட்டமிட்டிருந்த தற்கொலைப் படை தாக்குதல் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.
Recommended Video
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், எல்லையில் பயங்கரவாதிகள் தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேபோல வெளிநாடுகளில் இருந்த ஊடுருவல் முயற்சியும் நடந்து வருகிறது.
இதனை எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் தீவிரமாகக் கண்காணித்து முறியடித்து வருகின்றனர்.

கைது
மேலும், வெளிநாடுகளில் இருந்து கொண்டு இந்திய மண்ணில் தாக்குதல் நடத்துவது தொடர்பான பயங்கரவாதிகள் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது. அதேபோன்ற ஒரு சம்பவம் தான் இப்போது ரஷ்யாவில் நடந்துள்ளது. இந்தியாவின் அரசில் முக்கிய இடத்தில் உள்ள அரசியல் தலைவரைக் குறித்து வைத்து தற்கொலைப்படை தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதியைக் கைது செய்துள்ளதாக ரஷ்யா அறிவித்து உள்ளது.

ரஷ்யா
இது தொடர்பாக ரஷ்ய பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில், "ரஷ்யாவில் தடைசெய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதியை ரஷ்யாவின் பாதுகாப்புத் துறை அடையாளம் கண்டு கைது செய்துள்ளது. அவர் மத்திய ஆசியப் பிராந்தியத்தில் உள்ள ஒரு நாட்டைச் சேர்ந்தவர்.

முக்கிய அரசியல் தலைவர்
அவர் இந்தியாவில் ஆளும் கட்சியைச் சேர்ந்த முக்கிய அரசியல் தலைவரைக் குறி வைத்து தற்கொலைப்படை தாக்குதலை நடத்தத் திட்டமிட்டிருந்தார் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. கைது செய்யப்பட்டவர் துருக்கியில் ஐ.எஸ்.ஐஎஸ் அமைப்பில் சேர்ந்துள்ளார்" என்று ரஷ்யா பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

ஐஎஸ்ஐஸ் அமைப்பு
ஐஎஸ்ஐஸ் அமைப்பு இந்தியாவிலும் தடை செய்யப்பட்ட ஒரு பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி ஆபத்தான கருத்துகளைத் தொடர்ந்து பிரசாரம் செய்து வருவதாக மத்திய அரசு ஏற்கனவே எச்சரித்து உள்ளது. இதன் காரணமாக சைபர்ஸ்பேஸ் இதுபோன்ற கருத்துகள் பரவுவதைச் சம்பந்தப்பட்ட ஏஜென்சிகள் உன்னிப்பாகக் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உள் துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications