Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓட்டு எண்ணுவதற்கு முன்பாக இவிஎம் இயந்திரங்களை சரிபார்ப்பது எப்படி? தெளிவாக விளக்கிய கபில் சிபல்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வாக்கு எண்ணிக்கையின்போது, இவிஎம் இயந்திரத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதா என்பதை கண்டறியும் வழிகளை விளக்கி உள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவரும், உச்ச நீதிமன்ற பார் கவுன்சில் தலைவருமான கபில் சிபல்.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை 6 கட்டங்களாக 488 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இறுதிக் கட்ட வாக்குப்பதிவு வரும் ஜூன் 1 ஆம் தேதி 57 தொகுதிகளில் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

Kapil Sibal explains How To Check EVM Tampering on vote counting day

முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்ற நிலையில் அப்போது முதல், வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்கள் ஸ்ட்ராங் ரூமில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இவிஎம் இயந்திரங்களை முறைகேடு செய்ய வாய்ப்புள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்ட நிலையில், இவிஎம் இயந்திரங்களை பயன்படுத்தக்கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிர முடியாது என மறுத்துவிட்டது சுப்ரீம் கோர்ட்.

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் ஒரு வார காலம் மட்டுமே உள்ள நிலையில், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் என அனைத்து தரப்பினருமே தேர்தல் முடிவுகளை ஆர்வத்தோடு எதிர்நோக்கி வருகின்றனர். இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், உச்ச நீதிமன்ற பார் கவுன்சில் தலைவரும், மூத்த வழக்கறிஞரும், ராஜ்யசபா எம்.பியுமான கபில் சிபல் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார்.

அப்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் எந்த விதமான முறைகேடு செய்தாலும், அதை எப்படி அடையாளம் காண்பது என முக்கிய ஆலோசனைகளை வழங்கி உள்ளார் கபில் சிபல். வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) திறக்கப்படும்போது என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி அரசியல் கட்சிகளுக்கும், வேட்பாளர்களின் முகவர்களுக்கும் பல்வேறு தகவல்களை அளித்துள்ளார் கபில் சிபல்.

லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது முறைகேடுகள் நடைபெற வாய்ப்பு உள்ளது என்றும், முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்கவும், முறைகேடுகள் நடைபெற்றுள்ளதை கண்டறியவும் எச்சரிக்கையாக இருக்குமாறு அரசியல் கட்சிகளின் முகவர்களுக்கு கபில் சிபல் அறிவுறுத்தி உள்ளார்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்யப்பட்டுள்ளதா என்பதை அடையாளம் காண வாக்குச்சாவடி முகவர்களுக்கு கபில் சிபல் கூறியுள்ள டிப்ஸ் பின்வருமாறு:

1. ஜூன் 4ஆம் தேதி காலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பு விழிப்பாக இருந்து கீழ்காணும் நடைமுறைகளை செய்ய வேண்டும்.

2. வாக்குப்பதிவு இயந்திரம் எந்த நேரத்தில் திறக்கப்படுகிறது என்பதை குறித்துக்கொள்ள வேண்டும்.

3. கட்டுப்பாட்டு கருவி எண், வாக்குப்பதிவு இயந்திர எண், விவிபாட் இயந்திர அடையாள எண் என அனைத்தையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.

Kapil Sibal explains How To Check EVM Tampering on vote counting day

4. வாக்குப்பதிவு இயந்திரத்தில் தெரியும் தேதி, நேரத்தையும், அன்றைய நேரத்தையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இது வேறுபட்டால் முன்பே இயந்திரம் திறக்கப்பட்டு இருக்கலாம் என அர்த்தம்.

5. இவிஎம் இயந்திரத்தில் காட்டும் பதிவான வாக்குகள் விவரத்தை கவனமாகப் பார்த்து குறித்துக்கொள்ள வேண்டும். எண்ணும்போது அதிக வாக்குகள் இருக்கும்போது, ​​மீண்டும் பிரச்சனை வரலாம்.

6. இவை அனைத்தையும் சரிபார்த்த பிறகே இவிஎம் இயந்திரத்தில் உள்ள "ரிசல்ட்" என்ற பட்டனை அழுத்த வேண்டும்.
இவ்வாறு வாக்கு எண்ணிக்கையின் போது கவனிக்க வேண்டிய நடைமுறைகள் அடங்கிய ஒரு சார்ட்டையும் காட்டி விளக்கி உள்ளார் கபில் சிபல்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+