”ஹிஜாப்” முக்கியமில்லை.. அது பெண்களை பின்னுக்கு தள்ள நடக்கும் சதி.. கேரளா ஆளுநரின் அடுத்த அதிரடி..!
டெல்லி : இஸ்லாத்தில் அவசியமானது என ஐந்து விஷயங்கள் மட்டுமே உள்ளதாகவும் அவற்றில் ஹிஜாப் இல்லை எனவும் ஹிஜாப் சர்ச்சை முஸ்லிம் பெண்களை பின்னுக்குத் தள்ளும் சதியே தவிர சர்ச்சை இல்லை என கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் உள்ள சில உயர்நிலைப் பள்ளிகள், கல்லூரிகளில் முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முஸ்லீம் மாணவிகள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் இந்துத்துவா மாணவர்கள் ஹிஜாப்பை எதிர்த்து போராட்டம் நடத்தி வந்தனர்.
கல்வீச்சு போன்ற சம்பவங்கள் ஏற்பட்டு வன்முறை நடந்ததால் கர்நாடகாவில் உள்ள உயர்நிலைப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஹிஜாப் குறித்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் முஸ்லீம் சமூகத்தினர் வழக்கு தொடர்ந்தனர்.

ஹிஜாப் விவகாரம்
ஹிஜாப் விவகாரம் சர்வதேச பிரச்சினையாக மாறும் வாய்ப்பு இருந்த நிலையில், வெளிநாடுகள் இவ்விவகாரத்தில் தலையிட வேண்டாம் என இந்தியா சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனாலும் பிரச்சனை ஓயாத நிலையில் பல்வேறு தரப்பினரும் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கேரள ஆளுநர் கருத்து
சில கருத்துக்கள் ஹிஜாப்புக்கு ஆதரவாகவும் சில கருத்துக்கள் சர்ச்சையை மேலும் வலுவாக்கும் வகையிலும் இருந்து வருவது பரபரப்பை மேலும் கூட்டி வருகிறது. இந்த நிலையில் இஸ்லாத்தின் அவசியமான ஐந்து விஷயங்கள் மட்டுமே உள்ளன எனவும் அவற்றில் ஹிஜாப் இல்லை என கேரள மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் தெரிவித்துள்ளார்.

ஹிஜாப் அவசியம் இல்லை
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஆரிப் முகமது கான் சமீபத்தில் கேரள மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக பேசிய அவர்," இஸ்லாத்தில் அவசியமான 5 விஷயங்கள் மட்டுமே, அவற்றில் ஹிஜாப் இல்லை எனவும், அரசியலமைப்பின் 25 வது பிரிவின் பாதுகாப்பைக் கோரும் எந்தவொரு அம்சமும் "நம்பிக்கை நடைமுறைக்கு இன்றியமையாததாகவும், உள்ளார்ந்ததாகவும் மற்றும் ஒருங்கிணைந்ததாகவும்" இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வகுத்துள்ளது என்றார்.

பெண்களுக்கெதிரான சதி
ஹிஜாப் தொடர்பாக நடந்து வரும் சர்ச்சை, முஸ்லிம் பெண்களை பின்னுக்கு தள்ளும் சதியே தவிர சர்ச்சை அல்ல என கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் தெரிவித்துள்ளார். "மதத்திற்கும் கல்விக்கும் இடையே எந்த முரண்பாடும் இல்லை," என்றும், இஸ்லாத்தில், "மதத்தின் நோக்கம் மனிதர்களை அறிவைப் பெறச் செய்வது" என்றும், முத்தலாக் தடைக்குப் பிறகு - மூன்று முறை தலாக் சொல்லி உடனடியாக விவாகரத்து செய்யும் நடைமுறை - முஸ்லீம் பெண்கள், விடுதலையை உணர்கிறார்கள். "அவர்கள் சுதந்திர உணர்வுடன் இருக்கிறார்கள். அவர்கள் கல்வியைத் தொடர்கிறார்கள். அவர்கள் பெரிய தொழிலில் சேருகிறார்கள், ஹிஜாப் சர்ச்சை ஒரு சதி" என்று அவர் மேலும் கூறினார்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications