பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசினேன்...மனிதாபிமான உதவிகள் செய்ததற்கு நன்றி..உக்ரைன் அதிபர் ட்விட்
டெல்லி: பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்த உரையாடலின் போது ஜி 20 தலைமை பொறுப்பை ஏற்றிருக்கும் இந்தியா, அதில் சிறப்பாக செயல்பட வாழ்த்து தெரிவித்ததாகவும் தனது ட்விட்டரில் ஜெலன்ஸ்கி பதிவிட்டுள்ளார். எனினும், இந்தியா தரப்பில் இருந்து உடனடியாக எந்த தகவலும் இந்த பேச்சுவார்த்தை தொடர்பாக வெளியிடப்படவில்லை.
உக்ரைன் நாடு நேட்டோ அமைப்பில் சேர்வதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது போர் தொடுத்தது.
ஆண்டின் துவக்கத்தில் தொடங்கிய இந்த போர் ஏறத்தாழ ஓராண்டு நிறைவடைந்து விட்டாலும் முடிவுக்கு வந்த பாடில்லை. ரஷ்யா நினைத்த அளவுக்கு இந்த போர் அமையவில்லை.

உக்ரைன் - ரஷியா போர்
உக்ரைனும் ரஷ்யாவுக்கு கடும் சவால் கொடுத்து வருகிறது. இதனால் ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் முடிவில்லாமல் நீடித்துக் கொண்டே வருகிறது. தங்கள் நோக்கம் நிறைவேறும் வரை உக்ரைனில் இருந்து வெளியேற மாட்டோம் என்று ரஷ்யா விடாப்படியாய் கூறி தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறது.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ட்விட்
இந்தியாவும் இந்த யுகம் போருக்கானது அல்ல என்றும் பேச்சுவார்த்தை மூலமே பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது. ரஷ்ய அதிபர் புதினை சந்தித்த போதும் பிரதமர் மோடி இதையே வலியுறுத்தினார். அதேபோல், உக்ரைன் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக அவ்வப்போது பேசி வருகிறார். இந்த நிலையில், பிரதமர் மோடியுடன் இன்று தொலைபேசியில் பேசியதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மோடியுடன் தொலபேசியில் பேசினேன்
இது தொடர்பாக ஜெலன்ஸ்கி தனது ட்விட்டரில் பதிவிட்டு இருப்பதாவது:- பிரதமர் மோடியுடன் நான் தொலபேசியில் பேசினேன். ஜி 20 மாநாட்டுக்கு தலைமையை ஏற்றிருக்கும் இந்தியாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தேன். இந்த தளத்தில் (ஜி 20) தான் நான் அமைதி திட்டத்தை முன் வைத்தேன். தற்போது அதை அமல்படுத்துவதில் இந்தியாவின் பங்களிப்பை நான் எண்ணிப்பார்க்க்கிறேன்.

நன்றி தெரிவித்துக் கொண்டேன்
ஐக்கிய நாடுகள் அவையில் அளித்த ஆதரவு மற்றும் மனிதாபிமான உதவிகள் செய்ததற்காக நன்றியையும் தெரிவித்துக் கொண்டேன்" என்று பதிவிட்டுள்ளார். எனினும், இரு தலைவர்களும் பேசியது தொடர்பாக இந்திய தரப்பில் இருந்து எந்த ஒரு தகவலும் உடனடியாக வெளியாகவில்லை. இதற்கு முன்பாக கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி உக்ரைன் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேசினார்.

பொதுவான கருத்தை மட்டுமே..
அப்போது, ராணுவம் மூலமாக தீர்வு காண முடியாது என்றும் அமைதி முயற்சிகளுக்கு இந்தியா பங்களிக்க தயாராக இருப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார். எனினும் உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யாவிற்கு இதுவரை இந்தியா கண்டனம் எதையும் பதிவு செய்யவில்லை. பேச்சுவார்த்தை மூலமாக நெருக்கடியை தீர்க்க வேண்டும் என்ற பொதுவான கருத்தையே சொல்லி வருவது கவனிக்கத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications