Tamil Nadu Rains Live Update: தமிழகத்தில் 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் தொடர் மழை காரணமாக 10 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு அந்தந்த ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர்.


குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது.
அதிகாலை 3 மணி முதல் 4 மணிக்குள் கரையை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.
புதுச்சேரி - சென்னை இடையே தாழ்வு மண்டலம் கரையை கடந்தது.
வடதமிழகம் பகுதியில் நிலைகொண்டுள்ள நிலையில் மேற்கு, வடமேற்கு திசையில் நகரக்கூடும்.
கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், சேலம், ஈரோடு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தொடர் கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.
செங்கல்பட்டு, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை: பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.
விழுப்புரம், தருமபுரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், நீலகிரி, சேலம், கள்ளக்குறிச்சி: பள்ளி கல்லூரிக்கு விடுமுறை

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்க தொடங்கியது.
சென்னை- புதுச்சேரி இடையே கரையை கடப்பதால் வட கடலோர மாவட்டங்களில் காற்றுடன் கூடிய மழை.
தாழ்வு மண்டலம் சற்று நேரத்தில் கரையை கடக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல்.
கரையை கடக்கும்போது மணிக்கு 50 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என அறிவிப்பு
READ MORE












Click it and Unblock the Notifications