மணிப்பூர்: ஒரு சம்பவம் தானா? எத்தனை கேஸ் போட்டீங்க? எத்தனை பேரு அரெஸ்ட்?உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி
டெல்லி: மணிப்பூரில் பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டது ஒரு சம்பவம் மட்டுமல்ல.. இதுபோல எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? பலாத்கார சம்பவத்தில் வழக்கு பதிவு செய்ய ஏன் 14 நாட்கள் தாமதம் என உச்சநீதிமன்றம் சரமாரியாக கேள்விகள் எழுப்பி இருக்கிறது.
மணிப்பூரில் குக்கி இனப் பெண்கள், மைத்தேயி இனக் கும்பலால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டனர். மேலும் பலாத்காரம் செய்யப்பட்ட 3 பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு 100க்கும் மேற்பட்டோரால் ஊர்வலமாக தெருவில் அழைத்துச் செல்லப்பட்ட பயங்கரத்தின் வீடியோ வெளியாகி தேசத்தை மூர்ச்சையாக்கிப் போட்டது.

இச்சம்பவம் தொடர்பாக வீடியோக்கள் வெளியான பின்னர் மணிப்பூர் மாநில அரசு வழக்குகள் பதிவு செய்து பலரையும் கைது செய்தது. இந்த நிலையில் மணிப்பூர் பலாத்கார சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப்பட்டன. பாதிக்கப்பட்ட பெண்களும் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், சரமாரியான கேள்விகளை முன்வைத்தார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்த கருத்துகளின் தொகுப்பு:
மணிப்பூர் சம்பவம் ஒரு நிர்பயா சம்பவம் போல அல்ல. இது கூட்டு பலாத்காரம். இந்த சம்பவம் நிகழ்ந்து 14 நாட்களுக்கு பின்னரே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய 18 நாட்கள் தாமதம் ஏன்? மணிப்பூரில் பாதிக்கப்பட்ட பெண்களை போலீசார்தான் அழைத்து சென்று அந்த கும்பலிடம் விட்டிருக்கின்றனர்.
மணிப்பூரில் வீடியோ வெளியானது ஒரு சம்பவம் மட்டுமல்ல. மணிப்பூர் மாநிலத்தில் பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான இத்தகைய வன்முறைகளில் இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யபப்ட்டுள்ளன? மணிப்பூரில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சட்ட உதவிகள் வழங்கப்பட்டிருக்கின்றனவா? பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு நிர்வாகத்தின் மீது நம்பிக்கை உருவாக வேண்டும். மணிப்பூர் மாநிலத்தில் இன்னமும் அமைதி திரும்பாமல் இருப்பது அதிர்ச்சியை தருகிறது.
மணிப்பூரில் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக நீதியை வழங்குவோம். மணிப்பூரில் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் தராமல் இருக்கின்றனர். அவை தொடர்பாகவும் நாம் விசாரித்தாக வேண்டும். இவ்வாறு தலைமை நீதிபதி சந்திரசூட் கூறினார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications