அடேங்கப்பா.. 5 மாநில தேர்தலுக்கு பாஜக ரெடி.. தோல்வியிலும் பாடம் கற்கனும்.. மீட்டிங்கில் சொன்ன மோடி
டெல்லி: வெற்றி மற்றும் தோல்வி ஆகிய இரண்டிலிருந்தும் பாடம் கற்றுக்கொண்டு முன்னேற வேண்டும் என்று பாஜக தொண்டர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.
சனியின் நேரடி பார்வையில் இணையும் சூரியன், செவ்வாய் - கவனம் தேவை என்கிறார் ஜோதிடர் நெல்லை வசந்தன்
உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களுக்கு பாஜக இப்போதே தயாராகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று மாலை பிரதமர் நரேந்திர மோடி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது சில அறிவுரைகளை அவர்களுக்கு வழங்கியுள்ளார்.
பாஜக நிலைமை
சமீபத்தில் முடிவடைந்த தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு மகிழ்ச்சியையும் கவலையையும் சேர்த்து வழங்கியுள்ளன. அசாம் மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது பாஜக. புதுச்சேரியில் என் ஆர் காங்கிரஸ் கட்சியின் கூட்டணியோடு பாஜக ஆளும் அரசில் அங்கம் வகிக்கிறது.
மேற்கு வங்கத்தில் தோல்வி
அதேநேரம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மேற்கு வங்க தேர்தலில் மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்க பாஜக பெரும்பான்மைக்கு பக்கத்தில் கூட நெருங்க முடியவில்லை. தமிழகத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணி அரியணை ஏறியது. அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்திருந்ததால் ஒருவகையில் தமிழகத்தில் அவர்கள் தங்கள் கூட்டணி ஆட்சியை இழந்து விட்டனர் என்று கூறலாம்.
5 மாநில சட்டசபை தேர்தல்
கேரளாவில் ஒரு தொகுதியில் கூட பாஜக வெற்றி பெற முடியவில்லை என்ற நிலையில் தான் அடுத்த ஆண்டு உத்தர பிரதேசம், பஞ்சாப், கோவா, குஜராத் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன. இதையொட்டி இப்போதே பாஜக வெற்றிக்காக வியூகங்களை வகுத்து வருகிறது.
பாடம் கற்க வேண்டும்
இந்த நிலையில்தான் பாஜக நிர்வாகிகளிடம் நரேந்திர மோடி பேசுகையில், வெற்றி பெற்று இருந்தாலும் சரி , தோல்வியடைந்து இருந்தாலும் சரி, அதில் இருந்து என்ன பாடம் கற்க கற்க முடியுமோ அதைக் கற்றுக்கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேற வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். ஓராண்டுக்கு முன்பே தேர்தல் வெற்றிக்காக பாஜக வியூகம் வகுத்து வரும் நிலையில், காங்கிரஸ் வழக்கம்போல அமைதியாக உள்ளது.