இங்கிலாந்தில் மட்டுமல்ல.. பல நாடுகளில் புதிய வகை கொரோனா பரவியிருக்கலாம்- சவுமியா சுவாமிநாதன்
டெல்லி: புதியவகை கொரோனா வைரஸ் இங்கிலாந்தில் மட்டுமல்ல உலகின் பல நாடுகளிலும் பரவியிருக்க கூடும் என்று உலக சுகாதார ஆய்வு அமைப்பின் (WHO) தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது 70 சதவீதம் வேகமாக பரவுகிறது. இதையடுத்து அந்த நாட்டுடனான விமானச் சேவைகளை பல ஐரோப்பிய நாடுகள் தடை செய்துவிட்டன.
இந்தியாவும் பிரிட்டனுடனான விமான போக்குவரத்தை தடை செய்வதாக நேற்று அறிவித்தது. இந்த நிலையில்தான், சவுமியா சுவாமிநாதன் இவ்வாறு ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.

பிற நாடுகள்
பிரிட்டன் நாட்டில், கொரோனா தொடர்பாக ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதனால் அவர்கள் புதிய வகை வைரசை கண்டுபிடித்திருக்க கூடும். ஆனால் பிற நாடுகளிலும், இதேபோன்ற வைரஸ் அல்லது உருமாறிய வைரஸ் பரவியிருக்க வாாய்ப்பு உள்ளதை மறுக்க முடியாது என்று சவுமியா கூறியுள்ளார்.

தென் ஆப்பிரிக்கா
இங்கிலாந்து மட்டுமல்ல, இத்தாலி, ஆஸ்திரேலியா, டென்மார்க் மற்றும் நெதர்லாந்தில், இதேபோன்ற வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதாக சமீபத்தில் இங்கிலாந்து தெரிவித்திருந்தது. அதுமட்டுமல்ல, தென் ஆப்பிரிக்காவில் வேறு மாதிரியான கொரோனா வைரஸ் பரவியிருப்பது தெரியவந்தது.

வழக்கமான நடைமுறை
இதுகுறித்து சவுமியா மேலும் கூறுகையில், வைரஸ்களில் பல மாற்றங்கள் ஏற்படுவது வழக்கம்தான். அதில் எது ஆதிக்கம் செலுத்தும் வைரஸ் வகையோ, அது பரவும். இதுவும் அப்படியான ஒரு மாறுபாடாகத்தான் இருக்க முடியும். புரத அமைப்பை மாற்றிக்கொண்டு, தடுப்பூசியால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மாற்றம் பெற்றிருக்கும் என்பதற்கான வாய்ப்பு இல்லை என்பதே எனது கருத்து.

தடுப்பூசியால் கட்டுப்படுத்த முடியுமா?
புதிய வகை கொரோனா வைரசின் தன்மையை அறிவதற்காக ஆய்வுகளை செய்து வருகிறோம். இன்னும் இரண்டு வாரங்களில், அதுகுறித்த உண்மை நிலை தெரியவரும். இப்போதைக்கு அந்த வைரசையும் தடுப்பூசியால் கட்டுப்படுத்த முடியும் என்பதுதான் எங்கள் கருத்து.

பாதுகாப்பு நடவடிக்கைகள்
புதிய வகை வைரசாக இருந்தாலும் கூட, ஏற்கனவே எடுக்கப்படும் நோய் பரவல் தடுப்பு முறைகளான, முகக் கவசம், கைகளை சோப்பு போட்டு கழுவுதல் போன்ற நடைமுறைகளையும், சமூக இடைவெளியையும் பின்பற்றினால் போதுமானது. இதற்காக புதிதாக எந்த நடவடிக்கையும் தேவையில்லை. இவ்வாறு சவுமியா சுவாமிநாதன் தெரிவித்தார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications