மத்திய அரசு அதிரடி.. நிர்பயா பலாத்கார குற்றவாளியின் கருணை மனுவை நிராகரிக்க.. ஜனாதிபதிக்கு பரிந்துரை
Recommended Video
டெல்லி: நிர்பயா பலாத்கார குற்றவாளியின் கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என குடியரசுத் தலைவருக்கு மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.
டெல்லியில் இதே டிசம்பர் மாதம் 2012ம் ஆண்டு ஓடும் பேருந்தில் நிர்பயா என்ற இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார்.
இந்த கொலை வழக்கு குற்றவாளிகள் 4 பேருக்கு மரண தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.

குடியரசுத் தலைவருக்கு
இந்த 4 குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மா குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கருணை மனு அனுப்பி உள்ளார். மற்றொரு குற்றவாளியான முகேஷ் கருணை மனு அனுப்ப மறுத்துவிட்டார்.

தூக்கிட்டு தற்கொலை
இனொரு குற்றவாளி ஜெயிலிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான். நான்காவது குற்றவாளியான அக்ஷய குமார் சிங்கும் உச்ச நீதிமன்றத்தில் தனது தண்டனையை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்யவில்லை.

நிராகரிக்க பரிந்துரை
இந்நிலையில் வினய் சர்மாவின் கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு மத்திய அரசு இன்று பரிந்துரைத்துள்ளது.

எண்கவுண்ட்டர்
முன்னதாக ஹைதராபாத்தில் இளம் பெண் மருத்துவர் பலாத்காரம் செய்து எரித்து கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 4 இளைஞர்களும் எண்கவுண்டரில் இன்று அதிகாலை சுட்டுக்கொல்லப்பட்டனர். இதற்கு நாடு முழுவதும் மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

10 நாளில் தண்டனை
ஹைதராபாத் பலாத்கார வழக்கில் 4 குற்றவாளிகளும் கைது செய்யப்பட்ட 10 நாட்களுக்கு உள்ளாகேவே எண்கவுண்டர் செய்து கொல்லப்பட்டதை நிர்பயாவின் தாயார் வரவேற்றுள்ளார். இந்த சூழ்நிலையில் தான் மத்திய அரசு நிர்பயா பலாத்கார குற்றவாளியின் கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்துள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications