மத்திய அரசு அதிரடி.. நிர்பயா பலாத்கார குற்றவாளியின் கருணை மனுவை நிராகரிக்க.. ஜனாதிபதிக்கு பரிந்துரை
Recommended Video
டெல்லி: நிர்பயா பலாத்கார குற்றவாளியின் கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என குடியரசுத் தலைவருக்கு மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.
டெல்லியில் இதே டிசம்பர் மாதம் 2012ம் ஆண்டு ஓடும் பேருந்தில் நிர்பயா என்ற இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார்.
இந்த கொலை வழக்கு குற்றவாளிகள் 4 பேருக்கு மரண தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.

குடியரசுத் தலைவருக்கு
இந்த 4 குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மா குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கருணை மனு அனுப்பி உள்ளார். மற்றொரு குற்றவாளியான முகேஷ் கருணை மனு அனுப்ப மறுத்துவிட்டார்.

தூக்கிட்டு தற்கொலை
இனொரு குற்றவாளி ஜெயிலிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான். நான்காவது குற்றவாளியான அக்ஷய குமார் சிங்கும் உச்ச நீதிமன்றத்தில் தனது தண்டனையை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்யவில்லை.

நிராகரிக்க பரிந்துரை
இந்நிலையில் வினய் சர்மாவின் கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு மத்திய அரசு இன்று பரிந்துரைத்துள்ளது.

எண்கவுண்ட்டர்
முன்னதாக ஹைதராபாத்தில் இளம் பெண் மருத்துவர் பலாத்காரம் செய்து எரித்து கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 4 இளைஞர்களும் எண்கவுண்டரில் இன்று அதிகாலை சுட்டுக்கொல்லப்பட்டனர். இதற்கு நாடு முழுவதும் மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

10 நாளில் தண்டனை
ஹைதராபாத் பலாத்கார வழக்கில் 4 குற்றவாளிகளும் கைது செய்யப்பட்ட 10 நாட்களுக்கு உள்ளாகேவே எண்கவுண்டர் செய்து கொல்லப்பட்டதை நிர்பயாவின் தாயார் வரவேற்றுள்ளார். இந்த சூழ்நிலையில் தான் மத்திய அரசு நிர்பயா பலாத்கார குற்றவாளியின் கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்துள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications