பிப்ரவரியில் தடுப்பூசி... மார்ச் மாதம் கொரோனா பாதிப்பு... செவிலியர் அதிர்ச்சி
டெல்லி: கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை எடுத்துக்கொண்ட செவிலியருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா, டெல்லி, கேரளா போன்ற மாநிலங்களில் வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது.

இதனால் அனைத்து மாநிலங்களையும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவாக மேற்கொள்ளப்படும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. ஜனவரி 16ஆம் தேதி சுகாதார ஊழியர்கள் உட்பட முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கி நடைபெறுகிறது.
அதன்படி டெல்லியிலுள்ள சத்யவாடி ராஜா ஹரிஷ் சந்திரா அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரியும் ஒருவர் பிப்ரவரி மாதம் 21 நாட்கள் இடைவெளியில் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் எடுத்துக்கொண்டார்.
இந்நிலையில், நேற்று வழக்கம் போல பணியிலிருந்தார். அப்போது, திடீரென்று அவருக்கு உடல் வலியும் வேர்வையும் அதிகரித்துள்ளது. இதையடுத்து அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளார். அப்போது அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசி எடுத்துக்கொண்ட பின்னரும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது எதிர்பார்த்துத்தான் என்றும் இதனால் அதிர்ச்சியடையத் தேவையில்லை என்றும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். எந்த நோய்க்கும் எந்தத் தடுப்பூசியும் 100 சதவிகிதம் பலன் அளிக்காது என்றும் இதனால் தடுப்பூசி எடுத்துக்கொண்ட பின்னரும் சிலருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்படுவது இயல்பு தான் என்றும் எய்ம்ஸ் முன்னாள் மருத்துவர் டாக்டர் ஜி.சி. கில்னானி தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி எடுத்துக்கொண்ட பின்னர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும்கூட அதன் தீவிர தன்மை குறைவாகவே இருக்கும் என்றும் இதன் மூலம் உயிரிழப்புகளைப் பெருவாரியாகக் கட்டுப்படுத்தலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications